சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Sept 2015

பவர் கட்... ஸ்டாலின் டென்ஷன்... கேகேஎஸ்எஸ்ஆருக்கு டோஸ்!

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், கடந்த 20ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை சந்திக்கும் விதமாக 'நமக்கு நாமே விடியல் மீட்பு' என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கினார். நெல்லை, தூத்துக்குடி உள்பட ஒவ்வொரு இடத்திலும் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இது அ.தி.மு.க.வினரிடத்தில் கடும் எரிச்சலை கிளப்பி உள்ளது. சமீபத்தில் கூட, மு.க.ஸ்டாலின் மதுரைக்குள் நுழையக்கூடாது என்று மதுரை மாநகராட்சியில்  தீர்மானம் நிறைவேற்றினர்.

இதற்கிடையே ஸ்டாலின் சுற்றுப்பயணத்தில் ஏதாவது குளறுபடி பண்ணும் வகையில், ஸ்டாலின் இருக்கும் பகுதியில் பவர் கட் பண்ணும்படி மின் வாரிய அதிகாரிகளுக்கு அ.தி.மு.க.வினர் மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில், அவர் வரும் நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

நேற்று விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். அப்போது முதல் அவர் சுற்றுப்பயணம் செய்த ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி ஆகிய இடங்களில் பவர் கட் தொடர்ந்தது. இதன் உச்சக்கட்டமாக விருதுநகரில் மாலை ஒரு திருமண மண்டபத்தில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் உரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மு.க.ஸ்டாலின் பேச தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே வழக்கம் போல் திடீரென்று பவர் கட் ஆனது. அப்போது திருமண மண்டபத்தில் இருந்த ஜெனரேட்டரை வைத்து அந்த நிகழ்ச்சியை முடித்தனர் தி.மு.க.வினர்.

இதற்கிடையே மு.க.ஸ்டாலின் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு,  அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள காரியாபட்டி அருகே தி.மு.க.வை சேர்ந்த மந்திரி ஓடை பஞ்சாயத்து தலைவர் கண்ணன் என்பவரது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சில லட்சங்கள் செலவழித்து ஸ்டாலின் தங்கும் அறையில் பாத்ரூம், ஏ.சி. உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தங்கும் மந்திரி ஓடை பகுதியில் இரவில் கரண்ட் கட் செய்ய ஆளும்கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, இதை சமாளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் நேற்று தங்கிய கண்ணன் வீட்டின் வெளியே பெரிய ஜெனரேட்டரை தி.மு.க.வினர் தயாராக வைத்திருந்தனர். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற கொஞ்ச நேரத்தில் பவர்கட் ஆனது. உடனே ஜெனரேட்டரை வைத்து நிலைமையை சமாளித்தனர்.

கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு டோஸ்

 நமக்கு நாமே திட்ட பயணத்திற்காக வரும் தனக்கு தி.மு.க.வினர் ஆடம்பர விளக்குகள், பிளக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது. ஆடம்பர வரவேற்பு கூடாது. குறிப்பாக ஆட்களை திரட்டிக்கொண்டு வரக்கூடாது. இது முழுக்க முழுக்க பொது மக்களை நேரில் சந்திக்கும் நிகழ்ச்சி என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் மு.க.ஸ்டாலின் முன்னரே எச்சரித்திருந்தார். அதனால்தான் நமக்கு நாமே திட்டத்தில் முக்கிய புள்ளிகள் யாரும் ஸ்டாலினுடன் வருவதில்லை.
இந்நிலையில், விருதுநகரில் பயணத்தை முடித்துக்கொண்டு அருப்புக்கோட்டைக்கு மாலை வந்தார் மு.க.ஸ்டாலின். அருப்புக்கோட்டை சவுண்டம்மன்கோவில் உள்பட சில இடங்களில் அவர் மக்களை நேரடியாக சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தி.மு.க. நிகழ்ச்சிகளை எப்போதுமே ஆடம்பரமாகவே செய்து பழகிப்போன விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., வழக்கம் போல் ஸ்டாலின் மனதை கவருவதற்காக அவர் பேச இருந்த மீட்டிங் பாயிண்டுகளில் அதிக அளவில் டியூப்லைட்டுகள், போகஸ் லைட்டுகள் வைத்து ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தார்.

இதைக் கண்ட மு.க.ஸ்டாலின் டென்ஷனாகி விட்டார். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எல்லா இடங்களிலும் பேசி முடித்து விட்டு, அருப்புக்கோட்டையில் இருந்து கல்குறிச்சிக்கு செல்லும் வழியில் தன்னுடன் காரில் வந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம், "ஏன் இப்படி ஆடம்பர ஏற்பாடுகள் செய்கிறீர்கள். இப்படி செய்தால் நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமே வீணாகிப்போய் விடும்" என்று டோஸ் விட்டாராம். இதனையடுத்து கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர் ஏற்கவில்லையாம்.


அதனால், மு.க.ஸ்டாலினின் நிகழ்ச்சி முடியும் வரை அப்செட் மூடில் வலம் வந்தார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிறகு அருப்புக்கோட்டை தொகுதியான கல்குறிச்சி, காரியாபட்டி பகுதிகளுக்குள் மு.க.ஸ்டாலின் நுழைந்ததுமே  கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு விழுந்த டோஸ்  குறித்து முன்னமே அறிந்து வைத்திருந்ததாலோ என்னவோ,  முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசும், அவரது ஆதரவாளர்களும் மு.க.ஸ்டாலினை விட்டு கொஞ்சம் தூரத்திலேயே அவருடன் வலம் வந்தனர்.


No comments:

Post a Comment