சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Apr 2014

மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்கள் கடலில் காணப்பட்டதாக ஆஸ்திரேலியா தகவல் அளித்துள்ளது.

கடந்த மார்ஸ் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற மலேசிய விமானம் காணாமல் போனது. அது இந்திய கடலில் நொறுங்கி விழுந்து நொறுங்கி இருக்கலாம் என கருதி உலக நாடுகள் தேடுதல் வேட்டையை தொடங்கின.

ஒரு மாதம் ஆகியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.அதன் பின்னர் கடந்த வாரம் ஆஸ்திரேலியா 27 வருடங்களுக்கு முன் பனிமலையில் மோதி கடலில் மூழ்கிய "டைட்டானிக்" கப்பலை தேடிய சைட் ஸ்கேன் சோனார் தொழில் நுட்பத்தில் தேட ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்தது. தற்போது மலேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப் பட்டதாக ஆஸ்திரேலியா அறிவித்தது.


செயற்கைக்கோள் படத்தில் கடலில் விழுந்த மலேசிய விமானத்தின் உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டதாகவும், அவை தற்போது தேடிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து ஐயாயிரம் கடல் மைல் தொலைவில் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டேவிட் ஜான்ஸ்ட்டன் அறிவித்துள்ளார்.


29 Apr 2014

நவீன மயமாகும் விளம்பரத்துறை...


சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வேலை தரும் ஒரே தொழில் விளம்பரத்துறை. நாம் காலையில் எழுந்ததும் பயன்படுத்தும் டூத்பேஸ்ட் முதல் இரவு பயன்படுத்தும் கொசு விரட்டி வரை அனைத்தையும் மக்களிடையே சுலபமாக கொண்டு செல்லும் வேலையை விளம்பரங்கள் தான் செய்கிறது. 






பிரபலங்கள் மட்டுமே விளம்பரங்களில் நடிக்க முடியும் என்ற நிலைமை மாறி மற்றவர்களும் இப்போது விளம்பரங்களில் நடித்து புகழ் பெறுகிறார்கள். ஒரு வயது குழந்தை கூட விளம்பரத்தில் நடித்து சம்பாதிக்கிறது.விளம்பரம் எடுப்பது என்பது சாதாரண வேலை அல்ல. வெறும் முப்பது நொடிகளில் பொருளை பற்றிய அனைத்து விஷயங்களையும் மக்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்ல வேண்டும்.

தற்போது மும்பை தான் விளம்பரத்துறையை ஆட்சி செய்கிறது.மும்பையில் நவீன முறையில் இந்த தொழிலை ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். அங்கிருக்கும் "காஸ்டிங் டைரக்டர் " என்பவரிடம் நம் விளம்பரத்தின் கருத்தை சொல்லி எத்தனை பேர் தேவை என்று சொன்னால் போதும், அவர்கள் அந்த திறமைகள் கொண்ட 50 பேரை நம் முன் நிறுத்திகிறார்கள்.ஒரு மணி நேரத்தில் நமக்கு தேவையான 5 பேரை செலக்ட் செய்துவிடலாம். இது போல் குழந்தைகள், அம்மாக்கள் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துவிட முடியும்.சென்னை மாடலிங் துறையும் இப்போது நவீனமாகி கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் தருகிறார்கள். குழந்தைகளும், அம்மாக்களும் கூட இங்கே கணிசமாக சம்பாதிக்கிறார்கள். கல்லூரி மாணவிகள் படித்து கொண்டும், வேலை பார்க்கும் பெண்கள் வேலையை பார்த்து கொண்டும் இந்த துறையில் ஈடுபடுகிறார்கள்.


 டீன்-ஏஜ் பெண்கள் உயரம் 5.7 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். கட்டுக்கோப்பான உடலமைப்பு இருக்க வேண்டும். பார்க்க லட்சணமாகவும், புடவை கட்டினாலும், மாடர்ன் உடை அணிந்தாலும் பொருத்தமாக இருக்க வேண்டும்.விளம்பர துறையில் அழகு அவசியம்.நம் மனதில் பாசமும் ,உணர்வில் கருணையும், வாழ்க்கையில் ஒழுக்கமும் இருக்க வேண்டும்.எப்போதும் டென்ஷனாக இருந்தால் அழகு போய்விடும். ஆரோக்கிய உணவு, அளவான தூக்கம் என முறையான வாழ்க்கை வாழ்ந்தால் அழகை பாதுகாக்கலாம்.

மும்பையில் குழந்தையாக இருக்கும் போதே மாடலிங் உலகுக்கு தகுந்த படி அவர்களை வளர்க்கிறார்கள். அந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்தால் வேலை எளிது.சொன்னதை புரிந்து கொண்டு உடனே தக்கபடி நடிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்.மும்பை டீன்-ஏஜ் மாடல்களை பொறுத்தவரை விதூஷா, அகான்ஷா, பல்லவி சுபாஷ் போன்றவர்கள் பிரபலமானவர்கள். குடும்ப பாங்கு, மாடர்ன் உடை எதிலும் ஜொலிக்க கூடியவர்கள். அவர்களுக்கு ஒரு நாளுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை வழங்குவார்கள்.
பல விளம்பரங்கள் மும்பை மாடல்களை வைத்து எடுத்து விட்டு தென்ந்திய மொழிகளுக்கு மொழி மாற்றம் செய்து விடுகிறார்கள்.



சட்டம் படித்திருக்கும் ஸ்வேதா ஸ்ரீதர் ஐந்து ஆண்டுகளிள் 300 விளம்பர படங்களில் நடித்து அழகு தேவதைகளில் பலரை ஆச்சரியபடவைக்கிறார். அதே போல பயோ டெக்னாலஜி துறையில் முதுகலை பயின்று "ஸ்டெம்செல்" துறையில் ஜுனியர் சயிண்டிஸ்டாக பணிபுரியும் வித்யா விளம்பர படங்களில் நடித்து தனது இளமை, திறமை மூலம் பை நிறையவும் சம்பாதிக்கிறார்.AyuWage Services - Get Paid to Visits Sites and Complete Surveys

தொழில்துறை வளர வேண்டும் என்றால் விளம்பரம் மிக அவசியம் என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டதால் இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது.ஒரு விளம்பரம் வெற்றி பெறும் போது அந்த தொழிலும் வெற்றிபெறும்.எனவே எந்த பொருளையும் மக்கள் மத்தியில் பிரபலபடுத்த விளம்பரங்கள் தான் பெரும் உதவியாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


28 Apr 2014

கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

                       

கெவின் கார்ட்டர் - தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.


1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.



பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.



கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டுக்ளிக்செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தைநியூயார்க் டைம்ஸ்பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,
மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

                            

குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.


அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

(
நன்றி சமரசம் இதழ்)

                                  [signimg][url=http://www.probux.com/?r=Thangamstl][img]http://www.probux.com/images/banner3.gif[/img][/url]