சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jan 2016

பத்ம ஸ்ரீ விருது : பார்வையை மாற்ற வைத்த 'நாப்கின் '!

ந்தியாவின் பத்ம விருதுகள்,  பரிந்துரையின் அடிப்படையிலும் பிரபலத்தின் அடிப்படையிலுமே வழங்கப்படுகிறது என்பது பரவலான கருத்து. சில சமயங்கள் தெரிந்தோ தெரியாமலோ தக்க மனிதர்களையும் விருதுகள் சென்றடையத்தான் செய்கின்றன.   இந்த ஆண்டு கோவையை சேர்ந்த   முருகானந்தம் என்பவருக்கு  பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
சரி... இந்த முருகானந்தம் அப்படி என்ன இவர் சாதித்து விட்டார்? முருகானந்தம் தேர்வு செய்த பாதைதான் இன்று அவரை விருதுக்குரிய மனிதராக மாற்றியுள்ளது. நாப்கின்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்  குறைந்தது 20 ரூபாய் முதல் விற்கின்றன. அதற்காக அதிகளவு விளம்பரங்களும் செய்து அந்த செலவையும் நுகர்வோர் தலையில்தான் கட்டுகின்றன. 

பல ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்டதாக நாப்கின் வர்த்தகம் இருந்தாலும் இந்தியாவில் 60 சதவீத பெண்கள் நாப்கினை பயன்படுத்துவது இல்லை.  அவர்களை பொறுத்த வரை,  அது குடும்பத்திற்கு மேலும் சுமையை ஏற்றுவது போல.  பழைய துணிகளையே பயன்படுத்துகிறார்கள் என்கிற உண்மையையும் இங்கே உடைக்க வேண்டியது இருக்கிறது. 

முருகானந்தமும் ஏழ்மை  நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்க  வசதியில்லை.  இந்த உலகில் சாதித்தவர்களில் பல பேர் பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள்தானே. முருகானந்தத்தால் படிக்க முடியாமல் போனாலும் ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற வெறி மட்டும் மனதிற்குள் கனன்று கொண்டேயிருந்தது. அதுவே முருகானந்த்தை வெற்றிக்கரமான மனிதராகவும் மாற்றியுள்ளது.

ஏழை பெண்களை மனிதில் கொண்டுதான், நாப்கினை குறைந்த செலவில் தயாரிக்கும் எந்திரத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முருகானந்தம் ஈடுபட்டார். இதற்காக தனது வாழ்க்கையில் 12 ஆண்டுகள் செலவு செய்தார். இறுதியில் அதில் வெற்றியும் பெற்றார். முருகானந்தத்தின் தொழில் நுட்பத்தில் நாப்கின் தயாரிக்கும் முறை பன்னாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சவால் விடும் வகையில் இருந்தது. சுத்தத்திலும் சுகாதாரத்திலும் பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளுக்கு சற்றும் குறையவில்லை.
தனது தொழில்நுட்பத்தை வைத்து பணம் சம்பாதிக்கவும் முருகானந்தம் ஆசைப்படவில்லை.  தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமை வாங்கவும் அவர்  முயற்சிக்கவில்லை. தனது தயாரிப்பால் ஏழை பெண்கள் பயன்பட வேண்டுமென்பதே அவரது ஒரே இலக்கு. மகளிர் அமைப்புகள், பள்ளிகளில் மூலப் பொருட்கள் வழங்கி  நாப்கின் தயாரிக்க பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 

இன்று உலகின்  21 நாடுகளில் முருகானந்தம் கண்டுபிடித்த 2500  இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன, நாப்கின்களை உற்பத்தி செய்து தள்ளுகின்றன.சுமார் ஒரு கோடி பெண்கள், இந்த எளிய விலை நாப்கின்களை வாங்கி பயன்படுத்துகின்றனர்.  ஒரு பீஸ் நாப்கின் ஒரு ரூபாய் அல்லது 2 ரூபாய்தான். 

இவரது முயற்சியை பாராட்டி,  கடந்த 2014ஆம் ஆண்டு 'டைம் ' இதழ் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்களில் ஒருவராக முருகானந்தத்தை தேர்வு செய்தது. டைம் இதழ் தேர்வு செய்ததில் வியப்பில்லை.ஆனால் இப்போது அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பதுதான், சரியான நபர்களை சில சமயங்களில் விருதுகளும் கூட  அடையாளம் கண்டுகொள்கின்றன என்பதை காட்டுகிறது. 

பரிந்துரை இருந்தால்தான்தான் பத்ம விருதுகள் என்கிற நிலையில், முருகானந்தம் போன்றவர்கள் அது  பற்றிய பார்வையை மாற்றத்தான் செய்கிறார்கள்!  


எடை குறைய எளிதான எட்டு வழிகள் !

ப்படியாச்சும் வெயிட்டை குறைக்கணும்!’ என்று பலரும் புலம்பினாலும், அதற்காக அவர்கள் எதுவுமே மெனக் கெடுவதில்லை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு, உடலையோ, மனதையோ, நேரத்தையோ வருத்திச் செய்யாமல், எடையைக் குறைப்பதற்கான எளிய டிப்ஸ் கிடைத்தால்..?! 

ட்ரை இட்! 

* உணவைச் சுருக்காதீர்கள், பெருக்குங்கள்

எடுத்துக்கொள்ளும் டயட்டில், உணவுகளைச் சுருக்குவதற்குப் பதிலாக, சத்தான உணவுகளைப் பெருக்குங்கள். ஏனெனில், ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்று ஏக்கம் வந்தால், அதை விரட்டுவது கடினம். மாறாக, பழத்துண்டுகள், வெஜிடபிள் ஜூஸ், லோ காலரி உணவுகள் என்று கைவசம் வைத்துக்கொண்டு, சாப்பிடத் தோன்றும் போதெல்லாம் இவற்றைச் சாப்பிடுங்கள். ‘ரெண்டே இட்லிதான் சாப்பிட்டேன்’ என்ற பசி உணர்வு விரட்டப்படும்... மனதில் இருந்தும்!
* எக்ஸர்சைஸ் வேண்டாம்

ட்ரெட் மில், அப்டமன், ஜிம், ஏரோபிக்ஸ் எதையும் கட்டாயத்தின் பேரில் செய்தால், நீண்ட நாள் தொடர முடியாது. ‘வொர்க் அவுட்’ என்பது அலுப்பாக இருந்தால், செய்ய வேண்டாம். அப்படியென்றால் சேர்ந்துள்ள கலோரிகளை எப்படிக் கரைப்பது..? சைக்ளிங் செல்லலாம், காரைக் கழுவலாம், தோட்ட வேலை பார்க்கலாம், ஃபிரிஸ்பீ விளையாடலாம், குழந்தைகளின் காஸ்ட்லி உடைகளை மட்டும் கையால் துவைக்கலாம்... இப்படி ஏதாவது ஒன்றை சுவீகரித்துக்கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் செய்தால் போதும்! 

* ‘வாக்’ செல்லலாம் ஜாலியாக

எதுவுமே செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு ‘வாக்’ செல்லச் சொன்னால் எப்படி என்கிறீர்களா..?! இப்படிச் செய்து பாருங்கள்..! 

அலுவலகத்திற்கு பேருந்தில் செல்பவர்கள், முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வதோடு, வீடும் திரும்பும்போதும் அப்படியே செய்யலாம்; அலுவலகத்தில் காரை கடைசியாக பார்க் செய்துவிட்டு, நடந்து போகும் தூரத்தை அதிகரித்துக்கொள்ளலாம்; வீடு, அலுவலகம், மால், ஹோட்டல் என்று எங்கு சென்றாலும், எஸ்கலேட்டர் தவிர்த்து படிகளைப் பயன்படுத்தலாம்; அருகில் உள்ள கடை, கோவில், பேருந்து நிறுத்தத்திற்கு நடந்தே செல்லலாம்.
அதிகம் இல்லை... காலையில் 10 நிமிடங்கள், மாலையில் 10 நிமிடங்கள் என, நடப்பதற்கு இது போல ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆக, ஒரு நாளில் 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி, 10 நிமிடங்கள் உடற்பயிற்சி... 30 நிமிடங்கள் என்பது பிரமாதம் போங்கள்! 

* தண்ணீர் குடித்தால் எடை குறையும்

எப்படி..? சாப்பிடுவதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். அது உங்கள் பசியையும், ‘நிறையச் சாப்பிடணும்’ என்ற ஆர்வத்தையும் தணிக்கும். மேலும் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்வது, காரைக் கழுவும்போதோ, படிகளில் ஏறும்போது, ‘போதும்ப்பா...’ என்ற அயர்வைத் தராது!


* உங்கள் மிஸ் சொல்லித் தந்தார்களா... ஷேரிங்..


வீட்டில் மனைவி/கணவர், அலுவலகத்தில் நண்பர்/தோழி என்று உங்கள் உணவைப் பகிர்ந்துகொள்ள ஒரு பார்ட்னர் வைத்துக்கொள்ளுங்கள். பிடித்த உணவை டைனிங் டேபிளில் சந்திக்கும்போது, ‘அப்படியே சாப்பிடுவேன்!’ என்று தயாராகாமல், ‘பிரியாணியை ஷேர் செய்துக்கலாம்...’, ‘பனீர் சிக்கன் மசாலா 1/2 கேட்டு வாங்கிக்கலாம்...’ என்று பார்ட்னருடன் அதை ஷேர் செய்துவிடுங்கள். சாப்பிடவில்லை என்பதும் இல்லை, முழுதாகச் சாப்பிட்டதாகவும் இருக்காது! 

* பிளேட், டம்ளர், பவுல்... சைஸைக் குறையுங்கள்


பெரிய தட்டில் இரண்டு கரண்டி சாதம் வைத்தால், கொஞ்சமாகத்தான் தெரியும். ‘அய்யோ இவ்ளோ கொஞ்சமா சாப்பிடுறோமே’ என்று மனம் பிதற்ற ஆரம்பித்துவிடும். அதுவே சிறிய தட்டில் அதே இரண்டு கரண்டி சாதம் வையுங்கள்... நிறையும் கண்களும்! அதுபோலவே, பொதுவாக நமக்கு டம்ளர், பவுலின் அடிப்பாகத்தைப் பார்த்துவிட்டால், போதுமான அளவு சாப்பிட்டுவிட்டோம் என்ற திருப்தி வந்துவிடும். எனவே, சின்ன டம்ளர், பவுலாக வைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் காலியாகிவிடும்! 

* போர் அடிக்க நேரம் கொடுக்காதீர்கள்

வேலை, பொழுதுபோக்கு எதுவும் இல்லாமல் இருக்கும் நேரம்தாம், அதிகம் பேருக்கு ஸ்நாக்ஸ், சாப்பாடு தேடும். எனவே, உங்களை ‘என்கேஜுடு’ ஆக வைத்துக்கொள்ளுங்கள் அல்லது சுவாரஸ்மான பொழுதுபோக்கில் மனதை மடைமாற்றுங்கள். 

இதில் முக்கியமான விஷயம்... பொழுதுபோக்க டிவியில் சமையல் நிகழ்ச்சி, ஐஸ் கிரீம் விளம்பரம் என்று பார்த்தாலோ, பைக்கில் ரவுண்ட்ஸ் என்கிற பெயரில் வடைக் கடையில் வண்டி பிரேக் போட்டாலோ... செல்லாது செல்லாது. உணவை நினைவுபடுத்தாத நிமிடங்களாக அவை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்! 

* குறைந்த எடை குறைந்ததாகவே இருக்க வேண்டும்

எடுத்த முயற்சிகளுக்குப் பலனாக எடை குறையப் பெற்றதும், ‘எப்டீ?!’ என்று மற்றவர்களைக் கேட்க வைத்ததும் குட்! ஆனால் அதற்குப் பின் ரசகுலா டப்பாவையோ, மட்டன் கிரேவியையோ பார்க்கும்போது, ‘அதான் ஆபீஸ் ஃபங்ஷன்/அண்ணி வீட்டுக் கல்யாணம் முடிஞ்சிருச்சுல்ல... கொஞ்சம் வெயிட் போட்டுக்கிட்டா பரவாயில்ல... அப்புறம் மெலிஞ்சுக்கலாம்!’ என்று நினைத்து நாக்கை சந்தோஷப்படுத்துபவர்கள் பலர். வேண்டாமே! 

எடையைக் குறைத்து அதை அப்படியே பராமரித்து வந்தால், அதற்கான மெனக்கெடல்கள் ஆரம்பகட்டத்தைவிட குறைவாகவே தேவைப்படும். ஆனால் மீண்டும் எடை கூடிவிட்டால்... ‘மறுபடியும் முதல்லயிருந்தா?!’தான்! எனவே, கீப் ஃபிட்!


தற்கொலைக்கு தூண்டியது எது? - 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்!

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மாணவிகளின் மரணம். மூன்று மாணவிகளும் தற்கொலைக்கு முன் எழுதியுள்ள கடிதம் தற்போது சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில், அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காலேஜில நாங்க படிச்சத விட வேலை பார்த்ததுதான் அதிகம் என்றும் தங்கள் மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் இதோ...


'3 மாணவிகளை பலிவாங்கிய எஸ்.வி.எஸ். கல்லூரி அனுமதியின்றியே இயங்கியது':எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி
3 மாணவிகள் தற்கொலைக்குக் காரணமான கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி,  அரசு அனுமதியின்றியே இயங்கி வந்ததாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி.எஸ். கல்லூரியின் மோசமான நடவடிக்கையால் மனம் உடைந்த நிலையில், மாணவிகள்  பிரியங்கா, மோனிஷா, சரண்யா ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டனர். இதனையடுத்து அக்கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டு அக்கல்லூரியின் முதல்வர் கலாநிதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் இன்று (திங்கள்) செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.கீதாலட்சுமி, "விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் அந்தக் கல்லூரி இயங்கியுள்ளது.

இது குறித்து விசாரணைக் குழு அமைத்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலேயே சேர்க்க வேண்டும்"  என்று கூறினார்.