சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

5 Jan 2016

இவரின் கோபம்தான் பதன்கோட் தாக்குதலுக்கு காரணம்?

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி உள்ளதாகவும், நரேந்திர மோடிக்கும், நவாஸ் ஷெரீப்புக்கும் இடையேயான நட்பால் கோபமுற்றே அவர் தீவிரவாதிகளை தூண்டிவிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். 

கடந்த டிசம்பர் 25 -ம் தேதியன்று நவாஸ் ஷெரீஃபுக்கு 66-வது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருக்கு மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, பாகிஸ்தான் வருமாறு மோடிக்கு ஷெரீஃப் அழைப்பு விடுத்தார். மேலும் தனது பேத்திக்கு அன்றைய தினம் (டிச.25) திருமணம் நடைபெறும் தகவலையும் மோடியிடம் நவாஸ் கூறினார். இதையடுத்தே அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தானுக்கு மோடி அந்த திடீர் பயணத்தை மேற்கொண்டார். 

மோடியின் இந்த திடீர் பயணத்திற்கு இந்திய அளவில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தபோதிலும், பல்வேறு உலகநாடுகள் இதனை வரவேற்றன. மேலும் மோடியின் பயணத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டன.
பாகிஸ்தான் ராணுவத்தை பொறுத்தமட்டில், அது இந்தியாவுடன் நட்பு பாராட்டுவதை விரும்புவதில்லை. அதனையும் மீறி பாகிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்திய அரசுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்தால், அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக எல்லைப்பகுதிகளில் அத்துமீறலில் ஈடுபட்டு இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவம். பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கையால்,  இந்திய வீரர்களும் பதிலடி கொடுக்க நேரிடுவதால் இருநாடுகள் இடையே மீண்டும் கசப்புணர்வுகள் தலை தூக்கிவிடும். 

அப்படி இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளே இந்தியா - பாகிஸ்தான் உறவை சீர்குலைக்கும் விதமாக இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடுவார்கள். இதன் பின்னணியிலும் பெரும்பாலும் பாகிஸ்தான் ராணுவம் இருக்கும். 

அப்படியான ஒரு தாக்குதல்தான் தற்போது பதன்கோட்டில் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய மோடி - நவாஸ் சந்திப்பை பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் மிகுந்த கசப்புணர்வுடன் பார்த்ததாகவும், அந்த வெறுப்பின் விளைவே பதன்கோட் தாக்குதல் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதன்கோட் விமான தளத்தை தாக்குவதற்கான சதித்திட்டம் ராவல்பிண்டியில் உருவானதாகவும்,  மோடி - நவாஸ் சந்திப்பை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே உருவாகி உள்ள அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கான சாதகமான சூழலை கெடுக்க வேண்டும் மற்றும் இருநாடுகள் இடையே மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த தாக்குதலின் நோக்கம் என்றும் இஸ்லாமாபாத் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


No comments:

Post a Comment