சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jan 2016

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசுக்கு அண்ணா பதக்கம்!

சென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த யூனுசுக்கு தமிழக அரசு, அண்ணா பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த மழை சென்னையை புரட்டிப்போட்டதோடு, பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். வெள்ளத்தில் சிக்கிய தவித்த பலரை இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டனர்.
 
1.12.2015 அன்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் சித்ராவை மீட்டு பெருங்களத்தூர் மருத்துவமனையில் யூனுஸ் என்பவர் சேர்த்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மறுநாள் சித்ரா–கணவர் மோகன் ஆகியோர் அந்த குழந்தைக்கு யூனுஸ் என்று பெயரிட்டனர். 

முகமது யூனுசின் தன்னலமற்ற தீர செயல்களை பாராட்டி அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது. குடியரசு தின விழாவில் யூனுசுக்கு பதக்கம் மற்றும் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் சான்றிதழ்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


No comments:

Post a Comment