சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Jan 2016

4 இட்லி ஒரு தண்ணீர் பாக்கெட்... தியாகிகளை சிறப்பாக 'கவனித்த' அரசு!

யிரகணக்கானக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து பெற்று தந்த சுதந்திரத்தின் வழியாக ‘குடியரசு’ எனும் கோட்டையில் அமர்ந்து ஆட்சி புரிந்து வருகிறோம். ஆனால், அந்த தியாகச்சுடர்களுக்கு  உரிய மரியாதை அதிகார வர்க்கத்தினரால் கொடுக்கப்படுகிறதா? என்றால் அது கேள்விக்குறிதான்!
ஆண்டு தோறும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினங்களில் மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைப்பதும், அதனை தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று போராடிய தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதும் சம்பிரதாயமாக நடந்து வரும் ஒரு செயலாகவே இருக்கிறது. அதற்கு உதாரணம், ராமநாதபுரத்தில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் தியாகிகள் நடத்தப்பட்ட விதம்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள்தான் அதில் அதிகமாக இடம் பெற்றிருந்தனர். சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் போக,எஞ்சிய நூற்றுக்கணக்கானோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாவட்ட தலைநகரில் நடக்கும் சுதந்திரதினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் இவர்கள் அனைவரும் பங்கேற்று வந்தனர். இப்போது பல தியாகிகள் சுதந்திரதின, குடியரசு தின விழாக்களில் பங்கேற்பது இல்லை. இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் பத்தே பத்து தியாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் தியாகிகள் அவர்களது வாரிசுகள் என 7 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி வைத்து விழாவில் பங்கேற்ற தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனை தொடர்ந்து கொடிகம்பம் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்த தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. தலா 4 இட்லி ஒரு தண்ணீர் பாக்கெட் என்ற கணக்கில் 10 பொட்டலங்கள் வழங்கப்பட்டது. வயது முதிர்ந்த தியாகிகளுக்கு மட்டும்தான்  இட்லியும் தண்ணீர் பாக்கெட்டும்.  அவர்களுக்கு துணையாக வந்தவர்களுக்கு அதுவும் கிடையாது.
இது குறித்து விழாவிற்கு வந்திருந்த சில சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ''தாங்கள் பெற்று தந்த சுதந்திரத்தையும், அதன் மூலம் உருவான குடியரசை கொண்டாடும் விழாவில் பங்கேற்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வயது முதிர்ந்த தியாகிகள் வந்து செல்கின்றனர். இவர்களை உரிய முறையில் அழைத்துவரவோ, அவர்களுக்கு தேவையான உதவிகள் குறித்தோ அதிகாரிகள் சிந்திப்பதில்லை.

இந்த விழாவில் பங்கேற்கும் தியாகிகளை உரிய முறையில் அழைத்து வந்து, அவர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு வேளை உணவு வழங்கி சிறப்பித்தால் கிடைத்த சுதந்திரம் பறிபோய்விடுமா என்ன?
தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இது போன்று அலட்சியமாக நடத்தப்பட்டால் அதை இந்த அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்களா? இதையெல்லாம் சிந்தித்து இனிவரும் காலங்களிலாவது தியாகிகளுக்கு, அரசு அதிகாரிகள் உரிய மரியாதை கொடுக்க முன்வர வேண்டும்" என்று  கொதித்தனர்.


No comments:

Post a Comment