சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

17 May 2013

மதுவினால் ஏற்படும் தீமைகள்



1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2
குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3
நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4
நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5
நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6
நீ கஷ்டப்பட்டு உருவாக்கியவருமானம் பாழாகும்.
7
மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8
குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9
இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.
பழமொழிகள் கூறுவது:
1
குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2
மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3
கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது.


2000
ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.



குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு


குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை!!!

இன்று உலகிலேயே மிக அதிகமான உயிர் இழப்பை உண்டாக்குகின்ற முக்கிய காரணம, சாலை விபத்து...

1.2
மில்லியன் மக்கள் ஆண்டுதோறும் சாலை விபத்தால் உயிர் இழக்கின்றார்கள்...

இதனால் தனி மனித இழப்பு, அவரைச் சார்ந்த குடும்பத்தினருக்கு பேரிழப்பு, பொருளாதார இழப்பு போன்றவைகள் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கானோர் உடல் ஊனமுற்றவராகின்றார்கள்...

இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
நாம் ஒவ்வொருவரும் அக்கரை எடுத்து செயல்பட்டால் இதை மாற்றியமைக்க முடியும்...

*
மிக அதிக வேகம்.....
*
தலைக்கவசம் அணியாமல் செல்வது....
*
மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுதல்...
*
செல் போனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது...
*
சரியான ஓய்வின்றி, உறக்கமின்றி வாகனத்தை ஓட்டுவது...
*
போக்குவரத்து வாகன விதிமுறைகளை மதிக்காமல் வாகனத்தை ஓட்டுவது...
 இவைகள் தான், பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகின்றது...
*இரத்த தானம் செய்யுங்கள்...! சாலைகளில் சிந்தாதீர்கள்...!

*உங்கள் உயிரும், உங்களது இரத்தமும், உங்களது உடற்பாகங்களும் விலைமதிப்பற்றது    
 என்பதை உணருங்கள்...
* பசித்தவனுக்கு தான் தெரியும் பசியின் கொடுமை...
* விழுந்தவனுக்குத்தான் தெரியும் வலியின் வேதனை...
*
இழந்தவனுக்குத்தான் தெரியும் உறவின் பெருமை...!

No comments:

Post a Comment