சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2013

நம் மகன்



ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார் 
தலைப்பு கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள் 
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார். அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார்

என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள் 
என்று கொடுத்தார்.



 அதில் கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் டிவியை போல் ஆக்கிவிடு. 
நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதை போல் வாழ வேண்டும். 
எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர் 
நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும். 
அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.அவர் களைப்பாக இருந்தால் கூட. அப்புறம் அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்ப வேண்டும். என்னை விளக்க கூடாது. என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும். சண்டையிடவேண்டும். என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும். கடைசியாக ஒன்று நான் என் குடும்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்.  என்  இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.நான் டிவியை போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்.” 

                                        
    

இதை படித்துவிட்டு கணவர் சொன்னார்அந்த குழந்தை பாவம் என்ன பெற்றோர் இவர்கள் குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ” 

 ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் இந்த கட்டுரையை எழுதியது “ நம் மகன்

பெற்றோர்களே டீவீக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நம் குடும்ப உறவுகளை தூரமாக்கி விடாதீர்கள். டிவியில் வரும் சில ப்ரோக்ராம்கள் கூட குழந்தைகளிடம் எதிமறையான விளைவுகளை ஏற்படுத்த கூடியவைகளாகவே பெரும்பாலும் இப்பொழுது உள்ளன. எனவே பொன்னான நேரத்தை சிறிது குடும்பத்தினருடன் செலவிட பழக்கபடுத்திகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment