சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

4 May 2013

தன்மானச்சிங்கம் ’ கோதையம்மாள்



பெயர்: கோதையம்மாள்.

வயது:75 க்கும் மேல்.. .
(
அவருக்கே சரியாக நினைவில்லை..)
ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..
பிள்ளைகள்: தறுதலைகள்..
தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..
சம்பளம்: ஒரு நாளைக்கு ,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..
ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு..(அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும்,இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார். 

                    


எதேட்சையாகத்தான் சந்தித்தேன்..இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார் ,தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..


என்னால் அவருக்கு கொடுக்க முடிந்தது சில ஆறுதல்களை மட்டுமே..(எனது நண்பரும் நானும் கொடுப்பதாக முன்வந்த சில உதவிகளையும் கண்டிப்பாக மறுத்துவிட்டார்..மேலும் போட்டோவுக்கும் முகம் காட்ட மறுத்து விட்டார்..)  ஒரே ஒரு நிநிமிடம் யோசித்து பாருங்கள்...!  இந்த வயதில் நாம் எழுந்து நடக்க கூடிய நிலையில் இருப்போமா? என்று. ஆனாலும் இவர் குனிந்து கோலம் போடுவதை பாருங்கள்.இன்றைய பெண்கள் பல பேர் கோலம் என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் இருக்கிறார்கள். சிலர் கோலம் போடும்போது  உட்கார்ந்து தான் போடுவார்கள். நம் பெண்களின்  நிலைமை இப்போதே இப்படியென்றால் இந்த பாட்டியின் வயதில் எழுந்து நிற்க  முடியுமா? என்று தெரியாது.

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்.. 

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்..அதனாலென்ன  தன் மானம் இல்லாதவர்களுக்கெல்லாம் தன்மானச்சிங்கம் எனபேனர்வைக்கும் என் திரு நாட்டில் ,இவருக்கு பேனர் வைக்க என் பொருளாதாரம் இடம் கொடுக்காதுதான்..அதனால் என்ன... என் வலைபதிவில் மனதார பேனர் வைக்கிறேன்.

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.! நல்ல  கருத்துக்களை  உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.பிடித்திருந்தால் நண்பராக இணைந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே !


No comments:

Post a Comment