சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

14 Jul 2015

'எந்த நேரத்திலும் சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா பயணம்'!

 எந்த நேரத்திலும் சிகிச்சைக்காக ஜெயலலிதா அமெரிக்கா பயணம் ஆகலாம் என்று பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன்சாமி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்று வெளியே வந்த  ஜெயலலிதா,மீண்டும் முதல்வரானார்.  அதன்பின், நலத்திட்ட உதவிகள், புதிய அரசு கட்டடங்கள் திறப்பு, மெட்ரோ ரயில் துவக்க விழா என எல்லாவற்றையும் அவர் கோட்டையில் இருந்தபடியே தொடங்கி வைத்து வருகிறார்.

மேலும், எம்.எல்.ஏ.வாக ஆவதற்கு அவர் இடைத்தேர்தலில் போட்டியிட சென்னை ஆர்.கே. நகர் தொகுதியை தேர்ந்தெடுத்ததும் கூட, பிரசாரத்திற்கு சென்னையை தாண்டிய வேறு ஊருக்கு செல்ல முடியாது என்பதால்தான் என்று கூறப்பட்டது. ஜெயலலிதாவால் ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிற்கவோ, சிறிது தூரத்துக்கு நடக்கவோ இயலவில்லை என்றும், இதனால்தான் அவரது பதவியேற்பு விழாவில், சில நிமிடங்களுக்குள் அனைவரையும் கோரஸாகப் பதவிப்பிரமாணம் எடுக்கவைக்கும் நிலை ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

கால்களின் இரண்டு மூட்டுகளும் தீராத வலியை அளித்து அவரை வேதனைப்படுத்துகின்றன. இதற்காக அலோபதி, சித்தா ஆகிய இரண்டு மருத்துவ முறைகளின்படியும் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். அதற்கான சில பயிற்சிகளையும் மேற்கொள்கிறார், ஆனாலும் வலி குறைந்தபாடில்லை. நாளுக்குநாள் வலி கூடிக் கொண்டுதான் போகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது என்பது மருத்துவர்கள் அறிவுரை. அப்படி உட்கொண்டால், உடல் எடை கூடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்ளாமல் இருக்கும்போது வலி அதிகமாக இருக்கிறது. அதனால்தான் அவர் நடக்க, நிற்க சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்த பிரச்னைகள் காரணமாகவே அவர் தனது கொடநாடு செல்லும் திட்டத்தையும் கைவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து, தமிழக அரசியல் வட்டாரங்களில் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி மிக அதிக அளவில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தான், அண்மையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூட, ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பேசினார்.

சமீபத்தில், அதிமுக சார்பில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உரையை ஓ.பன்னீர்செல்வம்தான் வாசித்தார்.

அதில், 'கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில், வழக்கம்போல் நேரில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம். எனினும் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவின் காரணமாக, இந்த விழாவுக்கு என்னால் நேரில் வர இயலவில்லை. என்னால் இந்த விழாவில் கலந்துகொள்ள இயலாவிடினும், என் எண்ணங்கள் இந்த விழாவைச் சுற்றியே உள்ளன’ என குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா.

இதை தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு சர்க்கரை நோய், கால் மூட்டு பிரச்னை,  கல்லீரல் பிரச்னை உள்ளதால் மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர் என்று தகவல் வெளியானது. மேலும், இந்த பிரச்னைகளுக்கு ஜெயலலிதா, விரைவில் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் செய்திகள் உலா வந்தபோதும், இதுகுறித்து அ.தி.மு.க. தரப்பிலோ, அரசு தரப்பிலோ, அதிகாரிகள் தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணியன்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த நேரத்திலும் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று அங்கு பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் சேர்ந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள உள்ளார்" என்று கூறி உள்ளார்.

சுப்பிரமணியன்சாமியின் இந்த டுவிட் காரணமாக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.


No comments:

Post a Comment