சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Jul 2015

ஆக்ரமிப்பு, அலட்சியம், அக்கறையின்மை: துாங்கி வழியும் மகாமகம் ஏற்பாடுகள்!

புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா நடக்க இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான எந்த முன்னேற்பாடுகளும் நிகழாமல் இருப்பது மகாமக பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மகா உற்சவம், காலை, மாலை சாமி வீதியுலா என கும்பகோணத்தில் உள்ள 63 கோயில்களிலும் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும். மகாமகத்திற்கு இன்னும் 150 நாட்களே உள்ள நிலையில், எந்த பணிகளும் முழுமை அடையாமல் இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுவரை இரண்டு மகாமகத்தை கொண்டாடிய அதிமுக அரசு,  இப்போது மூன்றாவது மகாமகத்தை கொண்டாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. மகாமகத்திற்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், மகாமகம் நடப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள கும்பகோணம் வாசிகள், முதல்வர் நேரடியாக மகாமக பணிகளில் தலையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

முழு வீச்சில் பணிகள் நடைபெற்றாலும் இன்னும் 5 மாதத்தில் ஏற்பாடுகளை முடிக்க முடியுமா என கேள்வி எழுப்புகிறார்கள் பக்தர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி, “ கடந்த இரண்டு மகாமகத்திற்கும் ஆதீனபக்தர்கள், மடாதிபதிகள், தொழிலதிபர்கள், உபயதாரர்கள் என ஒரு கமிட்டி அமைத்து சாலை பணிகள், கழிப்பிட வசதி, போக்குவரத்து பணிகள், கோயில் திருப்பணிகள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தினார்கள் அதிகாரிகள்.

ஆனால் இப்போது பிப்ரவரி 13-ம் தேதி நடக்க இருக்கும் மகாமகத்திற்கு அரசு சார்பில் கமிட்டி அமைக்கவில்லை. எந்த பணிகளும் இதுவரை முழுமையாகவும் நடைபெறவில்லை. முன்கூட்டியே பணிகள் நடைபெற வேண்டுமென்பதற்காக அரசு சார்பில் 260 கோடி நிதி ஒதுக்கினார்கள். 

முதலமைச்சரின் வழக்கினை காரணம் காட்டி, சரியாக பொறுப்பாளர்கள் இல்லாததால் பாதிக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் பாதியில் நடைபெறாமல் இருக்கின்றது. இன்னும் மேலும் சில கோயில்களில் பாலாலயம் திருப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இனிவரும் காலம் மழை காலம் என்பதால் வர்ணங்கள் பூசுவது முதல் கட்டட பணிகள் வரை தாமதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 

பணிகளை அதிகாரிகளே தங்களது இஷ்டம்போல  செய்கிறார்கள். 80 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த விழாவில்,  அதற்கான ஏற்பாடுகளும், பணிகளும் இன்னும் 30 சதவீதம்கூட நடைபெறவில்லை. 40 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்குவதற்கு தனியார் லாட்ஜ்களையும், திருமண மண்டபங்களையும் இப்போதே புக் செய்துவிட்டார்கள். 

காவிரி ஆற்றில் குளித்துவிட்டு, மகாமக குளம், பொற்றாமரை குளத்தில் குளிக்க வேண்டும் என்பது ஐதீகம். 
ஆனால் குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இப்போதே தண்ணீர் விட்டு நீர் ஆதாரத்தை பெருக்கினால்தான் மகாமகம் நேரத்தில், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். 44 குளங்கள் இருக்கின்றன. அதில் 12 குளங்கள்தான் பயன்பாட்டில் இருக்கிறது. 17 குளங்கள் எங்கே இருக்கின்றன என்று தெரியாமல் ஆக்கிரமிப்புகாரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 15 குளங்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. 

பக்தர்கள் நீராடும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான திட்டத்தை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்தினால்தான் போதுமான பாதுகாப்பு கொடுக்க முடியும். போதுமான பாதுகாப்பு இல்லாமல் போனதால்தான் கடந்த 1992- ல் நடைபெற்ற மகாமகத்தில் உயிரிழப்பு சம்பவம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பத்து நாட்களும் மகாமக குளத்தில் நீராடலாம் என்று அறிவித்தார்கள். இந்த முறையும் பத்து நாட்களும் மகாமக குளத்தில் நீராடலாம் என்று அறிவிப்பை அரசு அறிவிக்க வேண்டும்.

பக்தர்கள் இலவசமாக தங்குவதும், குளியல் வசதி, போக்குவரத்து உள்ளிட்ட விவரங்களடங்கிய விளம்பர பலகைகளை ஒரு மாதத்திற்கு முன்பே, நகர்ப்புறங்களில் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார். 

பெயர் குறிப்பிட விரும்பாத சமூக ஆர்வலர் ஒருவர், “மூன்று குளங்களில் பக்தர்கள் நீராடுவதுதான் மகத்தின் சிறப்பே. மகாமக குளத்தில் நீராடிவிட்டு காவிரியில் குளிக்க வேண்டும். ஆனால், காவிரியின் படித்துறை நீண்டபடித்துறை. இதில் இறங்கித்தான் பக்தர்கள் நீராட வேண்டும். இடிந்த நிலையில் உள்ள படித்துறைகளை சீரமைத்தால்தான் பக்தர்கள் எந்தவிதமான சிரமங்களும் இல்லாமல் குளத்தில் இறங்கி நீராட முடியும்.

திருமஞ்சனத்திற்காக தீர்த்தவாரி மண்டபங்களும் சேதமடைந்து, ஆக்கிரமிப்புகளுடன் காணப்படுகிறது. சேதமடைந்து கிடக்கின்ற படித்துறைகளையும், மண்டபங்களையும் சீரமைப்பதற்கோ, ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கோ மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் சார்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இப்பொழுது ஆரம்பித்தால்கூட எந்த வேலையும் முழுமை அடைவதற்கான வாய்ப்பில்லை, ஏனென்றால், 3 மாதங்களுக்குள் மழை ஆரம்பித்துவிடும், மழை காலங்களில் எந்த வேலை செய்தாலும் பயன் இல்லாமல்தான் போகும். 

ஆதி கும்பேஸ்வரர் கோயில் மகாமகம் காலங்களில் 5 தேர்களை அலங்கரித்து, பக்தர்களின் பார்வைக்கு வைத்து பரவசமூட்டுவார்கள். ஆனால், 5 தேர்களில் 2 தேர் மட்டுமே இருக்கிறது; மீதமுள்ள 3 தேர்களில் இப்போதுதான் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் 5 மாதத்திற்குள் முடிவடையுமா? என்பது கேள்விகுறிதான். ஒருவேளை தேர் வேலைகள் நிறைவு பெற்றாலும், அதை தரமானதாக இருக்குமா என்பதும் கேள்விகுறிதான்.

வைணவ கோயில்களான சக்கரபாணி, சாரங்கபாணி, ராமசாமி, ராஜகோபாலசாமி, வரதராஜபெருமாள் கோயில்களின் திருப்பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றன. சாரங்கபாணிகோயிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில், ராமசாமி கோயிலில் அடுத்தமாதம் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில்  வரதராஜபெருமாள் கோயில், சக்கரபாணி திருக்கோயில் திருப்பணிகள் தாமதமாகவே நடைபெற்று வருகின்றன.
சிவன் கோயில்களான காளஹஸ்தீஸ்வரர், தானுபுரீஸ்வரர், சோமேஸ்வரர், கோடீஸ்வரர் கோயில் திருப்பணிகள் மெதுவாகவே நடைபெற்று வருகின்றன. இன்னும் குறுகிய நாட்களே இருப்பதால் திருப்பணிகளின் வேலைகளை அவசரகதியில் வேலை பார்த்தால் தரம் குறைவாகவே இருக்கும். 

நகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்டு 4 பாசன வாய்க்கால்கள் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்கள் டவுன் பகுதிகளுக்குள் செல்கின்றன. பிரதான வாய்க்கால்களான இவை தூர்ந்து கிடக்கின்றன. இதனால் மகாமகம் காலங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 
நகராட்சி நிர்வாகம் சார்பில் வாய்க்கால்களை சுத்தப்படுத்துவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. தற்போது தற்காலிக கழிப்பறைகள் மற்றும் பொதுகழிப்பறைகளை அமைத்து வருகிறார்கள்.  இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் போதிய தண்ணீர் இல்லாமல், பணியாளர்கள் இல்லாமல் மகாமகம் காலங்களில் பழைய நிலைக்கே திரும்பி வந்துவிடும். 

கும்பகோணம் ரயில்நிலையத்தில் பயணிகள் தங்கும் அறைகள் 4 மட்டுமே உள்ளது. மகாமகம் காலங்களில் 4 அறைகள் எப்படி போதுமானதாக இருக்கும். 80 லட்சம் பக்தர்களை எதிர்பார்க்கும் அரசு,  ரயில் மார்க்கத்தில் வருபவர்கள்தான் அதிகம்பேர் என கணக்கிட்டுள்ளது. ரயில்நிலையத்திலும் கழிப்பறைகள வசதிகள் இல்லை. தஞ்சாவூர் வரை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களை கும்பகோணம் வரை நீட்டிப்பு செய்யச்சொல்லி பலமுறை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம், ரயில் நீட்டிப்பதற்காக எந்த முகாந்திரமும் இல்லை"  என்று வேதனையுடன் சொல்லி முடித்தார்



No comments:

Post a Comment