சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Feb 2015

தாமரையைப் பிரிந்தது ஏன்?: தியாகு விளக்கம்!


தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், தாமரையுடன் திரும்ப வாழவும் விரும்பவில்லை என கவிஞர் தாமரையின் கணவர் தியாகு விகடனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தன் கணவர் தியாகு தன்னை விட்டுப் பிரிந்து சென்று ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டுடன் அவரது வீட்டில் திரைப்படப் பாடலாசியர் தாமரை உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில், உணமையாகவே தியாகு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறாரா என தியாகுவிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

‘’நான் ஏன் ஓடி ஒளியணும். பத்திரிகைகளுக்கு தாமரை கொடுத்த கடித்தைப் பாத்தேன்.எவ்ளோ தான் மோசமான கருத்து வேறுபாடு இருந்தாலும் பிரிவுதான் இதுக்கு நிரந்த தீர்வா இருக்கும். நான் வேளச்சேரியிலதான் இருக்கேன். நான் எங்கயும் ஓடி ஒளியலை. ஒரு நாள் என்னோட போன் ஸ்விட்ச் ஆப் ஆனதுக்காக எப்பவுமே இப்படிதான்னு முடிவு பண்ணா என்ன அர்த்தம். 


நான் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துட்டுதான் இருக்கேன்.களப்பணியிலயும் இயங்கிட்டுதான் இருக்கேன். தொடர்ந்து 5 வருஷமா எங்களுக்குள்ள ஒத்து வரலைனு அவங்களே சொல்றாங்க. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு யோசிக்கிற பொண்ணும் அவங்க இல்ல...அப்படி இருக்க எதுக்காக இப்படி யோசிக்கணும்.

என் மகனோட நான் தொடர்ந்து ஈமெயில் மூலமா பேசிட்டுதான் இருந்தேன். அவனும் எனக்கு பதில் அனுப் பியிருக்கான்.மகனுக்கும் எனக்குமான உறவு சுமூமாக இருந்த நிலையில், அவனோட மெயிலையும் முடக் கிட்டாங்க.ஒரு கட்டத்துல மகனை பிரியிற சக்தி எனக்கில்லைனாலும் என் மேல பாசத்தோட இருக்குற மகனுக்கு கஷ்டத்தை கொடுக்க வேணாம்னு கொஞ்சம் கொஞ்சமா அவனைவிட்டும் வேற வழியில்லாம அவனை தொடர்பு கொள்ள முடியாம பிரிஞ்சிட்டேன்.ஒரு பையனுக்காக ரெண்டு பேர் சண்டை போட் டுக்குறதை விட,  அவன் அம்மாகிட்டயே அவன் இருக்கட்டும்னு விலகிட்டேன்.
குடும்பத்துல இருக்குறதால களப்பணியில ஈடுபட முடியாதுனு எதுவும் இல்ல. இதுக்கு முன்னாடி என் னோட சமுதாயப் பணிகளை ஏத்துக்கிட்டவங்க இப்ப ஏத்துக்க மறுக்குறாங்க...அவ்வளவுதான்.இனி அவங்க என்னை அழைத்தாலும் அவங்களோட சேர்ந்து வாழற எண்ணம் எதுவும் எனக்கு இல்ல. அவங்களோட உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனா சேர்ந்து வாழ விருப்பம் இல்ல.


எனக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் இல்லை. அதனால அவங்களா விவாகரத்து கேக்காம நானாவும் நீதிமன்றத்தை அணுக மாட்டேன். அவங்க விவகாரத்து கேட்டாலும் மனசு ஒத்து கொடுக்க தயாரா இருக்கேன்.அதே நேரத்துல என் மகனிடம் மனப்பூர்வமா மன்னிப்பு கேக்குறேன்.
விகடன் மூலமா அவன்கிட்ட ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்.’’என்றவர் சற்று இடைவெளியுடன் சொன்னார்.

‘’மகனே சமரா...நீ ரொம்ப புத்திசாலி..நல்லா படிக்கணும்.நல்லா வளர்ந்து வாழ்ந்து காட்டணும்.அப்பா உன்கிட்ட  மானசீகமா மன்னிப்பு கேட்டுக்கிறேன் ‘’!


No comments:

Post a Comment