சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Feb 2015

கொசுவிரட்டிகளும் சிலபல கோளாறுகளும்!

இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா நாராயணா!’
இப்படிச் சொல்லாத ஆள் யார்? பெரிய பெரிய பிரச்னைகளை கூட எளிதாகச் சமாளிக் கிற நமக்கு, இந்த கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்கத்தான் வழி தெரிவதில்லை. கொசுவர்த்தி சுருள், மின்சார கொசுவிரட்டி தொடங்கி தடவிக்கொள்ளும் க்ரீம் வரை பல கவசங்களைப் பயன்படுத்தியும் அவற்றிடம் தோற்றுக்கொண்டேதான் இருக்கிறோம்!
மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா என வரிசை கட்டுகின்றன கொசுக்களின் மூலம் பரவும் நோய்கள். கொசு விரட்டிகளால் நமக்கு இந்த நோய்களில் இருந்து பாதுகாப்பு தானே? இப்படிக் கேட்பவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது. கொசுவிரட்டி மருந்துகளால் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கு தலுக்கு ஆளாகிறோம் என அதிர்ச்சி அளிக்கிறார் நுரையீரல் நோய் சிகிச்சை நிபுணர் வினோத்குமார். கொசுவிரட்டி மருந்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அவர் நம்மிடம் பேசியவை...

‘‘கொசுக்களை விரட்ட பெரும்பாலான மக்கள் கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துகிறார்கள். கொசுவர்த்தி சுருள் அலெத்ரின், ஈஸ்பயோத்ரின் போன்ற செயற்கையான வேதிப்பொருட்களால் செய்யப்படுகிறது. இந்த கொசுவர்த்தி சுருளை மணிக்கணக்காக பூட்டிய அறைக்குள் எரியவிடும் போது தலைவலி, கண் எரிச்சல் போன்றவை ஏற்படும். இது ஒரு எச்சரிக்கை மணி. இந்த நிலையிலே கொசுவர்த்தி கொளுத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூக்கிலும் கண்களிலும் நீர் ஒழுகுதல், மூச்சிரைப்பு போன்றவை ஏற்படும். தொண்டையில் வலி, அலர்ஜி, எரிச்சல், நோய்த்தொற்று ஏற்படும்.
வறட்டு இருமல் அதிகமாக வரும். ‘சைனசிடிஸ்’ ஏற்பட்டு மூக்கு அடைத்துக்கொள்ளும். சில நேரம் மூக்கின் உள்ளே தொற்றுக்கிருமிகள் அதிகமாகி சீழ் கூட பிடிக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே அலர்ஜி உள்ளவர்கள் கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மருத்துவரைப் பார்த்து உரிய சிகிச்சையைஎடுத்துக் கொள்ள வேண்டும். கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகையால் நுரையீரலும் பாதிப்படைகிறது. கொசுவர்த்தி புகை நுரையீரலை அழற்சி அடையச் செய்து ஆஸ்துமா நோயை ஏற்படுத்துகிறது. இதனால் சிலருக்கு ‘ஆஸ்த் மாடிக் அட்டாக்’ கூட ஏற்படும். கொசுவர்த்தி புகையை சுவாசிப்பது என்பது 100 சிகரெட் குடிப்பதற்குச் சமமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சிலர் ஏசி செய்யப்பட்ட அறையில் கொசுவர்த்தியை கொளுத்துவார்கள். இதனால் புகையானது அறையைவிட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே சுற்றும். தொடர்ந்து இதை சுவாசித்தால் நுரையீர லில் ஏற்படும் பாதிப்புகள் கேன்சராக கூட மாறலாம். சிலர் கொசுக்களை விரட்ட மின்சாரத்தில் இயங்கும் திரவங்களைப் பயன்படுத்துவார்கள். இதுவும் முற்றிலும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது. இவற்றை உபயோகித்தால் அறை மற்றும் ஜன்னல் கதவை கொஞ்சமாக திறந்து வைக்க வேண்டும். அறையில் காற்றோட்டம் இல்லையென்றால், கொசு விரட்டித் திரவங்களும் தும்மல், கண் எரிச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். கொசுவை விரட்டும் க்ரீம்களை தடவிக் கொள்வது கூட சிலருக்கு தோலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
பைப்புகள் மூலம் அடிக்கப்படும் கொசு மருந்துகளால் ஏற்படும் புகைமண்டலமே சிலருக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். சைனஸ் உள்ளவர்களுக்கு இடைவிடாத தும்மல் ஏற்படும். இப்படி புகை போடும் போது துணியால் மூக்கையும் வாயையும் மறைத்து கட்டிக்கொள்ள வேண்டும். கொசுக்களை விரட்ட சிலர் ஸ்பிரே அடிக்கிறார்கள். இது மூச்சுத்திணறல், தலைசுற்றல் ஆகிய பின்விளைவுகளை கொண்டுவரும். அதனால் கொசுவை விரட்ட நல்ல தரமான துணிகளில் தயாரிக்கப்பட்ட கொசு வலைகளை பயன்படுத்தலாம்.
விலை மலிவான கொசுவலைகளை பயன்படுத்தினால் போதிய காற்றோட்டம் இல்லாமல் மூச்சுவிடுவதில் பிரச்னை ஏற்பட்டு தூக்கம் பாதிக்கும். மட்டமான நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கும் கொசு வலைகளை பயன்படுத்தி னால் அதில் இருந்து வரும் ஒருவித துர்நாற்றம் தலைசுற்றல், வாந்தி, மயக்கத்தை ஏற்படுத்தும்...’’ என எச்சரிக்கும் வினோத்குமார், கொசு விரட்டிகளை தவிர்த்து, கொசுக்களை விரட்டும் வழிகளைச் சொல்கிறார்...
வீட்டில் உள்ள அறைகளை காற்றோட்ட மாக வைக்க வேண்டும். ஜன்னல்களை இறுக மூடி வைக்கக் கூடாது.
ஜன்னல்களில் சிறிய நுண்துளையுள்ள கொசு வலைகளை அடித்து வைப்பதால் காற்றோட்டமும் இருக்கும். கொசுக்களும் உள்ளே வராது.
கொசுவர்த்தி சுருளை பயன்படுத்துவதை தவிர்த்துவிட வேண்டும். வீட்டின் உள்ளே மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதாது... வீட்டைச் சுற்றி கழிவுகள், குப்பைக் கூளங்கள் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
கொசுவை நேரடியாக அடித்துக்கொல்லும் பேட்டரியில் இயங்கும் பேட் இப்போது கிடைக்கிறது. டென்னிஸ் பேட் வடிவத்தில் இருக்கும். இதனை பயன்படுத்துவதால் கொசுக்களிடம் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.
தரமான கொசு வலைகளை படுக்கையறையில் பயன்படுத்துவதன் மூலம் சுகமான நித்திரையைப் பெற முடியும்.
கொசுவிரட்டி க்ரீம்கள், ஸ்பிரே, லிக்யூட்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்த்துவிட வேண்டும்.
நம் முந்தைய தலைமுறை பயன்படுத்திய நொச்சி இலைகளை நெருப்பி லிட்டு புகை மூட்டும் வழிமுறையும் பயன்தரும்.

No comments:

Post a Comment