சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Feb 2015

ஃபேஸ் புக்: இதற்கெல்லாமா...?

விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வகையில் பலனளித்தாலும் வேறு வகைகளில் அது எதிர்மறையானதாகவே இருக்கிறது. சமீப காலங்களாக சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியினை இதற்கு உதாரணமாக கொள்ளலாம். குறிப்பாக ஃபேஸ் புக் எனப்படும் முக நூல். சாமான்யன் முதல் சக்தி மிக்க மனிதர்கள் வரை சர்வசாதாரணமாக அக்கவுண்ட் வைத்திருக்கும் இதில், சமூக விரோதிகள் கூட எந்த அடையாளங்களுமின்றி சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர்.

சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து கலாச்சார சீர்கேட்டில் ஈடுபட்டு வருகிறது ஒரு கும்பல். முகநுாலில் அக்கவுண்ட் வைத்துள்ள எனக்கு பெரும் அதிர்ச்சியளித்த விஷயம், அதில்  திருச்சியை சேர்ந்த ஓரின சேர்க்கையாளர்களுக்கு என .......................................... என்ற பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கி,  இயங்கி வருவதுதான். அதிர்ச்சிக்கு காரணம் எனது  சொந்த ஊர் திருச்சி. ஆன்மீகத்திற்கு பெயர் பெற்ற அற்புத நகரமான எங்கள் திருச்சி இளைஞர்களை குறிவைத்து கலாச்சாரத்திற்கு எதிரான வகையில் நடத்தப்படும் இந்த பக்கத்தில் மிக அறுவெறுப்பான படங்களும், அதற்கான கமெண்ட்டு களும் இடம்பெற்றிருப்பது எனக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்தது. இதில் உள்ளவர்கள் தங்கள் தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு நண்பர்கள் வட்டத்தில் “இணைந்து” கொள்கின்றனர்.


பிறகு தங்களுக்கு “அறிமுகமான” நண்பர்களின் தொடர்பு எண்ணை ஒருவருக்கொருவர், கொடுத்து “பழக” செய்கின்றனர். இதில் என்ன ஆபத்து என்றால் இந்த சமூக விரோதிகள் தங்களுக்கு பிடிக்காத பெண்களின் எண்களை இதில் குறிப்பிட்டு அவர்களுக்கு சங்கடம் விளைவிப்பதும் நடக்கலாம். பேசத் தயங்கும் பல விஷயங்கள் இந்த பக்கத்தில் சகஜமாக சேட்டிங் என்ற பெயரில் பகிரப்பட்டுள்ளது.

கணினி தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்து ஆண்கள் விபச்சாரத்தை ஊக்குவிக்கும் இந்த பக்கம் தொடர்ந்து இயங்கினால், திருச்சி பகுதி மட்டுமல்ல முகநுாலில் இயங்க பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள இளைய தலைமுறை தவறான வழிகளில் செல்ல வழியுள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த பக்கம் ஒரு சாம்பிள் மட்டுமே. இது போல் நிறைய பேர் வெவ்வேறு பெயர்களில் இணையம் வழியாக விபசாரம் மேற்கொள்கின்றனர்.
இத்தகையவர்கள் இயல்பாகவே இளைஞர்களை கவரும் நடிகைகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் அரை குறை ஆடையுடனான புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் பக்கத்திற்கு வரவழைத்து அவர் களைப் பற்றிய தகவல்களை பெற்று தொடர்பு கொண்டு, தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த வட்டத்தில் இணைத்துக்கொள்ளும் நபர்கள் நாளாவட்டத்தில் நண்பர்களாகி தங்களைப்போன்ற விருப்பம் கொண்டவர்களுடன் மறைமுகமாக ஒரு நெட்வொர்ககை ஏற்படுத்தி எதிர்காலத்திற்கு மிகப்பெரும் சவாலானவர்களாக மாற வாய்ப்பு உண்டு.
விட்டில் பூச்சியாய் அதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்துவிடும் அபாயம் உண்டு.

சமூகம் கலாச்சாரத்திறகெதிரான இந்த செயலை இனியும் அனுமதிக்காது காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். இதை பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் நிறைய அப்பாவி பெற்றோர்கள் பாதிக்கப்படுவர். நமது தொண்மையான கலாசாரமும் கூட பாதிக்கபடும்.


No comments:

Post a Comment