சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Feb 2015

''பைபிள் எங்களிடம்...நிலம் அவர்களிடம்...குறை சொல்வதே வேலை!'

ன்னை தெரசா சேவையின் முக்கிய நோக்கமே மத மாற்றம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  

இந்நிலையில் மோகன் பகவத்தின் இந்த குற்றச்சாட்டு ஏற்புடையதா? இதுகுறித்த உங்களது கருத்தை முன்வைத்து விவாதிக்கலாம் என்று விவாதக்களம் பகுதியில் நமது வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.

வந்து குவிந்த வாசகர்களின் காரசாரமான கருத்துகளில் இருந்து...

KUMAR: அன்னை தெரசா சார்ந்த இயக்கத்தின் நோக்கம் மத மாற்றம் மட்டுமே. என் மதத்துக்கு வா நன்மை செய்கிறேன் என்பது வியாபாரம். அதேபோல சில நன்மைகள் செய்துவிட்டு மத மாற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதும் வியாபாரமே! ஆனால் தொழுநோய் தழுவிய நோயாளிகளுக்கு அன்னை தெரசா செய்தது தாய்மை தொண்டு மட்டுமே. தாய்மை ஒருபோதும் வியாபாரம் ஆகாது. அதேபோல அன்னையின் சேவை ஒருபோதும் மதத்துடன் தொடர்பு உடையது அல்ல. இவர் சொல்வது 100% தவறு.

CHANDRA: டூ வீலர் வாகனம் போவதற்கே கஷ்டமான மலை கிராமங்கள். அங்குள்ள மக்கள் மருத்துவ வசதி வேண்டுமென்றால் நோயாளியை தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு பல மணி நேரம் நடந்து வந்துதான் மருத்துவ வசதி பெற முடியும். விஷ பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் வழியிலேயே மரணமடைந்ததும் நடப்பதுண்டு. அந்த கிராமங்களுக்கு மருத்துவமனை, பள்ளிக்கூடம் வருகிறது அங்கு சேவை செய்யும் கன்னிகாஸ்திரீகள், கிறிஸ்துவ மத்தத்தை சேர்ந்தவர்களுக்காக ஒரு சர்ச்சும் கட்டப்படுகிறது.
அந்த கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளில் வழிபடுவதை வேடிக்கையாக பார்க்கும் கிராம மக்கள் நாளடைவில் அவர்களின் சேவையால் கவரப்பட்டு தானாக மதம் மாறுகிறார்கள். கிறிஸ்தவ மிசனரிகள் ஆயிரக்கணக்கில் நீண்ட காலமாக செயல்படுகிறது. அவர்கள் கட்டடம் கட்டவும், உணவு மற்ற செலவுகளுக்காக வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பணம் பெறுவது உண்மைதான். மலை கிராம மக்கள் இப்படித்தான் மதம் மாறினார்கள். சமவெளி மக்கள் தீண்டாமை கொடுமையால் மதம் மாறுகிறார்கள். பணம் பதவிக்காக மதம் மாறுபவர்கள் மிகவும் குறைவு. ஆர்.எஸ்.எஸ் புளுகுவதை நிறுத்திவிட்டு இதுபோல சேவையில் ஈடுபடலாம்.

KIM: இவர்கள் தொண்டு செய்ய மாட்டார்கள் என்று எவரைச் சொல்கிறீர்கள்? ஆர்.எஸ்.எஸ், ராமகிருஷ்ண மடம், சங்கர மடம், அன்னை சாரதா மடம் இன்னும் கணக்கிலடங்கா ஹிந்து அமைப்புக்கள் செய்யும் சுயநலமற்ற தொண்டுகள் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் யார் என்ன செய்ய முடியும்? எத்தனை பள்ளிகள், கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், மருத்துவ முகாம்கள் தன்னலமற்ற ஹிந்து இயக்கங்களால் நடத்தப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், அல்லது தெரிந்தும் தெரியாதவர் போல் நடிக்கலாம். 

ARUN: அவரின் முக்கிய கொள்கை மத மாற்றம்தான் எனபதை ஓட்டு வங்கி அரசியலுக்காக வெளியில் சொல்லாமல் அமுக்கி வைத்து விட்டது காங்கிரஸ் அரசு ஆனால் உண்மை என்னும் பூனை குட்டி இப்போதுதான் வெளியில் வருகிறது. தெரசாவைவிட பலர் நம் நாட்டில் பல்வேறு சேவைகளை தெரசாவிற்கு முன்பும், பின்பும் செய்துகொண்டிருக்கின்றனர் விளம்பரம் இல்லாமல். ஆனால் மதம் மாற்றுவதை ஊக்குவிக்கவே இவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். போலி மதச்சார்பற்ற கட்சிகளும் இவரை தூக்கிவைத்து கொண்டாடின.

INDIAN : கிறித்துவர்கள் சேவை செய்கிறேன் என்று சொன்னாலே அதன் முக்கிய நோக்கம் மதமாற்றம் மட்டும்தான் அதன் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு பணம்தான். பின்னர் ஏன் தமிழக பாதிரியார் அலெக்ஸ் முஸ்லீம் நாடான ஆப்கன் சென்று சேவை செய்கிறேன் என்று சொல்லி அங்குள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும்? அவர் வேறு ஏதாவது கிறிஸ்தவ நாட்டிற்கு சென்று சேவை செய்து இருக்க கூடாதா? 

KALAYAN: வெள்ளையர்கள் வரும்முன்பு இந்திய ஏழை நாடாக இருந்திருந்தால் இங்கு வியாபாரம் செய்ய வந்திருப்பானா? போரிட்டு காலனி ஆட்சியை அமைத்திருப்பானா? ஆக மொத்தம் ஏழையாக்கியதும் அவன்தான். அதனை பயன்படுத்தி மதமாற்றம் செய்பவனும் அவனே.

NANBAN:
 மதர் தெரசாவின் மனித நேய சேவையால் வாழ்வு பெற்றவர்கள், ஆதரவு பெற்றவர்கள், அப்படி மதம் மாறி இருந்தால் ஆர்.எஸ். எஸுக்கு ஏன் வலிக்கிறது? இவர்கள், தொழுநோயாளிகளுக்கு, ஏழைகளுக்கு எதையும் செய்யவும் மாட்டார்கள், அடுத்தவர்கள் செய்தால் பொறாமையால் குறை சொல்வதே வேலை.

MANNAN0: சேவை மனப்பான்மைதான் நோக்கம் என்றால், மத மாற்ற தடை சட்டத்தை ஏன் எதிர்கிறார்கள் ?

DSAD: என்னமோ ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளால் இல்லாத வறுமை, நோய் இந்தியால இருக்கற மாதிரியும் அவங்களை காப்பாத்தறதுக்கு வந்த மாதிரியும்ல பேசறாங்க. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கால ஏற்கனவே மதம் மாற்றி முடிச்சுட்டாங்க. மிச்சம் இருக்கறது இந்தியா இங்க இருக்கிற ஏழ்மையை பயன்படுத்தி ஒரு கைல மருந்து இன்னொரு கைல பைபிள்.

STEPHEN: இங்க இருக்கிற ஏழ்மையை பயன்படுத்தி ஒரு கைல மருந்து இன்னொரு கைல கீதை குடுங்களேன் .

BALAJI: ஆப்ரிக்காவின் புகழ்பெற்ற ஒரு சொலவாடை... ”அவர்கள் அன்புடன் எங்கள் நிலத்திற்க்கு வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது... இப்போது எங்கள் கைகளில் பைபிள் அவர்களிடம் எங்கள் நிலம்.

VAIKUNDAMURTHY: தெரசாவின் சேவையை போற்றுபவர்கள். இஸ்லாமிய நாடுகளில் மிஷனரிகளை அனுமதிக்க சொல்லி கோரிக்கை வைக்கலாமே. ஏன் அங்கே ஏழைகள் இல்லையா?

HAJA MOIDEEN: தொழுநோய் தழுவிய நோயாளிகளுக்கு அன்னை தெரசா செய்தது தாய்மை தொண்டு மட்டுமே. தாய்மை ஒரு போதும் வியாபாரம் ஆகாது. அதேபோல அன்னையின் சேவை ஒரு போதும் மதத்துடன் தொடர்பு உடையது அல்ல.

IRUNGOVEL A P: மொரார்ஜி தேசாய் பாரத பிரதமராக இருந்தபோது, “மத மாற்ற தடைச் சட்டம்” கொண்டு வர ஆலோசனை செய்தார். உடனே இந்த பெண்மணி அவரை சந்தித்து கேட்ட கேள்வி என்ன? என்பதை அன்றைய ஊடகங்களை புரட்டிப்ப்பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். “அப்படியானால் எனக்கு இந்தியாவில் என்ன வேலை?”- இதுதான் இந்த பெண்மணியின் கேள்வி. மோகன் பாகவத் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

JAMAL: அவர் செய்த சேவைகளைப் பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே அதன் அருமை புரியும். இவ்வளவு காலம் அந்த பயனாளிகளெல்லாம் (நோயாளிகளெல்லாம்) எக்கேடு கெட்டும் போகட்டும் என்று இருந்து விட்டு, இப்பொழுது, திடீரென்று தூக்கத்தில் இருந்து எழுந்ததுபோல் இப்படி பேசுவதற்கு காரணம் என்ன? அவ்வளவும் அரசியல். பதவி, அதிகாரம் படுத்தும்பாடு.

MADURAI BALA: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறி இருப்பது உண்மை என்பதை தெரசா அவர்கள் இருந்தால் அவர் கூட ஒப்புக்கொள்ளவே செய்வார். அவர் சேவை செய்தார் என்பதை எவரும் மறுக்கவில்லை. மத மாற்றமும் ஊக்குவிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.


CHANDRA :அன்னை தெரசா பற்றி பேச உங்களுக்குத் தகுதி உள்ளதா? நீங்கள் தொழுநோய் உள்ளவர்களை எல்லாம் தொடவேண்டாம், தொண்டு செய்ய வேண்டாம் .நாங்கள் கட்டி ,நாங்கள் வடித்த சிலையை நாங்கள் தொட்டால் தீட்டு என்றும், எங்கள் உலகின் உன்னத மொழியாம் தமிழை நீச மொழி என்று கூறுவதை நிறுத்துங்கள். முன்னாள் முதல்வர் .கலைஞர் அவர்கள் கொண்டுவந்த அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினீர்கள் அல்லவா? அதை திரும்பப் பெறுங்கள். அவர்கள் திருச்சபை மூலம் கல்வி தந்தார்கள். எத்தனை, எத்தனையோ மக்கள் கல்வி பெற்றார்கள். ஆங்கிலேயரால். நீங்கள் என்ன செய்தீர்கள்? சமீப காலத்தில் சின்மயா போன்ற கல்விக்கூடங்கள் திறந்து எங்கள் தமிழனை, தமிழ் உங்கள் தாய் மொழி. அதனால் தன்னாலேயே வரும். நீங்கள் சமஸ்கிருதம் படியுங்கள். ஞாபக சக்தி பெருகும் என்று சொல்லி சம்ஸ்கிருத வியாபாரம் செய்கிறீர்கள். இதையெல்லாம் நிறுத்திவிட்டு எல்லோரும் ஓர் குலம் என்று சொல்லுங்கள். பின் எதற்கு மதம் மாறப்போகிறார்கள்?


IRUNGOVEL A P: ஐரோப்பாவிலேயே மிக ஏழ்மை மிகுந்த நாடு அல்பேனியா.அந்நாட்டில் பிறந்த தெரசா அம்மையார் தனது தாய் நாட்டின் வறுமையை போக்க போராடாமல் இந்தியாவின் வறுமையை போக்க கிளம்பி வந்தது சர்ச்சைக்குரியது மட்டுமல்ல அறிவுக்கு ஒவ்வாததும் ஆகும். எனக்கு சமூக சேவை செய்யும் ஆர்வம் உண்டானால் நான் பிறந்த ஊரான உறையூருக்கு செய்வேன். அல்லது என் ஊர் அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில் செய்வேன்.அல்லது என் மாவட்டம் அமைந்துள்ள தமிழ்நாட்டுக்கு செய்வேன். அல்லது என் மாநிலம் அமைந்துள்ள பாரத நாட்டிற்கு செய்வேன். அதை விட்டுவிட்டு அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் வாழும் ஏழைகளுக்கு நான் சமூகசேவை செய்யப்போகிறேன் என்று நான் சொன்னால் அது எவ்வளவு மோசடி. அதைப்போலத்தான் இருக்கிறது தெரசா அம்மையாரின் செயலும் ஆகும். இந்த மோசடியை அம்பலப்படுத்துவது எப்படி மதவெறியாகும்.

-இது எனது ஃபேஸ் புக் நண்பர் திரு உறையூரில் வந்தியத்தேவன் தனது சுவறில் போட்டிருந்த ஒரு நிலைத் தகவல். 

இதனை இங்கே வழி மொழிகிறேன்.

No comments:

Post a Comment