சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Feb 2015

இன்று என்ன நடக்குமோ... ? கடும் மன அழுத்தத்தில் கிறிஸ் கெயில்!

லகக் கோப்பை கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை, மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் படைத்தாலும் படைத்தார் தற்போது அவர் மீதுள்ள எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது... 40 ஆண்டு கால உலகக் கோப்பை வராலற்றில் விழுந்த முதல் இரட்டை சதம் இது.

இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பே கிறிஸ் கெயில் மிகச்சிறந்த வீரர்தான். அவரது அதிரடியில் மயங்காதவர்கள் இல்லை.பொதுவாக இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அவ்வளவாக 'சான்ஸ்' இல்லை என்றே இப்போதும் நம்பப்படுகிறது. ஆனால் கெயிலுக்கென்று உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள்.


கடைசியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக கெயில் ஆடிய 19 ஆட்டங்களில் அவர் பெரியதாக ஒன்றும் ஜொலித்துவிடவில்லை. இதனால் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பு கெயில் மீதும் எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருந்தது. முதல் ஆட்டத்திலேயே அயர்லாந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை விரட்டியடிக்க, இந்த உலகக் கோப்பையில் அந்த அணி வழக்கம் போலத்தான் என்ற கருத்தே ஏற்பட்டது. 

ஆனால் அதற்கு பின் பாகிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி.  தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு எதிராக பிரமாண்ட வெற்றி. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில்  கெயில் நடத்திய வானவேடிக்கையும் கூடவே அரங்கேறியது. ஆக இப்போதுதான் கெயில் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள மிகமுக்கிய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, தென்ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் கெயில் சிறப்பாக ஆடி அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுப்பார் என்பதே மேற்கிந்திய தீவுகள் அணி ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பு. 

இந்த எதிர்பார்ப்புதான் இப்போது கெயிலுக்கு மிகப் பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். உண்மையில் இரட்டை சதமடிப்பதற்கு முன் இருந்த அழுத்தத்தை விட,  100 மடங்கு அழுத்தத்தில் இருக்கிராறாம் கெயில். தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பொசுக்கென்று 'அவுட்'டாகி விட்டால் தனது' இமேஜ்' சுத்தமாக 'டேமேஜ்' ஆகிவிடும் என்பதை அவர் உணர்ந்துள்ளதாக சக வீரர்கள் கூறுகின்றனர்.
எனவே தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எண்ணத்தில் உள்ளாராம் கெயில். சட்டென்று கெயில் வீழ்ந்து விட்டால் மேற்கிந்திய தீவுகள் அணியும் பட்டென்று கடையை மூடி விடும் அபாயமும் இருக்கிறது.



No comments:

Post a Comment