சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Oct 2015

சரத்- விஷால் அணிகளுக்கு இடையே சமரச முயற்சி: களத்தில் இறங்கும் திரையுலக சங்கங்கள்!

நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் மற்றும் விஷால் இரு அணியினருக்கு இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் திரையுலக சங்கங்கள் ஈடுபட்டுள்ளன.
 
 
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி என இரண்டு அணிகள் களத்தில் குதித்துள்ளன. வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கு இடையே சமரச முயற்சி செய்ய திரையுலக சங்கத்தினர் களம் இறங்கியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக திரையுலக சங்கங்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், "காலம் சென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜிகணேசன், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் அன்றைய காலகட்டத்தில் முன்னணியில் இருந்த நடிகர், நடிகையரால், கட்டி காப்பாற்றப்பட்டு வந்த சங்கம்தான் தென்னிந்திய நடிகர் சங்கம். அந்த சங்கத்தில் எப்பொழுது தேர்தல் வந்தாலும் அமைதியாக நடைபெற்று தேர்தல் முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் கைகொடுத்து, கட்டிப்பிடித்து அன்பை பரிமாறி கொள்வர்.

சக சங்கங்களான தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் ஆகியவையுடன் இணக்கமாக நட்புறவு பாராட்டி வருவது நடிகர் சங்கம்தான்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் என்றவுடன் அனைவரின் பார்வையும், கவனமும் நடிகர் சங்கத்தின் மீது விழுந்துள்ளது. தேர்தலை தவிர்த்து சுமூகமாக முடிவு எடுக்கவும், இரு அணி சார்பிலும் ஒருவர் மீது மற்றொருவர் அறிக்கைபோர், பேட்டிகள் கொடுப்பதை தவிக்க வேண்டும் என இந்த கூட்டறிக்கை வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழைய பழமொழி உள்ளது. ஆனால் இன்று கூத்தாடி ரெண்டுபட்டதால் ஊருக்கு திண்டாட்டமாய் உள்ளது". திரையில் தோன்றி மக்களை பரவசப்படுத்தும் நடிகர்கள், அவர்களை பின்பற்றும் ரசிகர்கள், பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் நடிகர் சங்கத் தேர்தலை கண்காணித்து வருகின்றனர். இரு அணிகளிலும் போட்டியிடும் அனைவருமே எங்களுக்கு நண்பர்கள்தான்.

நடைபெற இருக்கின்ற நடிகர்கள் சங்க தேர்தலில் இரண்டு அணிகளுமே நிரந்தரமாக எதிரெதிராக மாறிவிடுவார்களோ என்ற கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரு அணியினரையும் சாராத பொதுவான திரைக் கலைஞர்கள் இதே கவலையை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்கள்.

ஆகவே, எல்லோருக்கும் நன்மை பயக்கும் விதமாக இந்த ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியை தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்தியத் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. ஆகவே, வரும் சனிக்கிழமை (10/10/2015) அன்று இரு அணியினரையும் அழைத்து பேசி ஒரு சுமூகமான உடன்பாடு ஏற்பட ஒரு கூட்டுக்குழு முயற்சிக்கிறது." என்று கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment