சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு!”

'காதலித்துப் பார்... உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்!’ எனும் கவிதை வரிகளுக்கு ஏற்பவிதார்த்-காயத்ரி ஜோடி முகங்களில் பிரகாச ஒளிவட்டம். கூடவே சேர்ந்துகொண்டிருக்கிறது 'தலை தீபாவளி’ குதூகலம்.  
''எனக்குப் பொண்ணுபார்க்க ஆரம்பிச்சப்ப நான் பார்த்த முதல் பொண்ணு போட்டோ இவங்களோடதுதான். மறுநாள் அவங்ககிட்ட போன்ல பேசினேன். நான் பேசுறதை எல்லாம் கேட்டு 'ம்’ கொட்டிட்டே இருந்தாங்க. 'அமைதியான பொண்ணுபோல’னு நினைச்சேன். ஆனா, அதுக்கு அடுத்த நாள்ல இருந்து அவங்க பேசிட்டே இருக்காங்க. நான் கேட்டுட்டே இருக்கேன்'' - விதார்த் சிரிக்க, செல்லமாக அவர் தோளில் இடிக்கிறார் காயத்ரி.
''இவரே சொன்னாலும் அது உண்மைதான். இவரை மாதிரி ஒரு அமைதியான ஆளைப் பார்க்க முடியாது. இவரைப்போல ஒரு நல்லவரும் இருக்க முடியாது. ரொம்ப ஸ்மார்ட்'' என கணவருக்கு 'வெரிகுட்’ சான்றிதழ் கொடுத்துவிட்டு தொடரும் காயத்ரி, ''என் ஊர் பழநி. இவர் வருஷாவருஷம் பழநிக்கு வந்து சாமி கும்பிடுவாராம். அப்ப எங்க வீட்டு வழியாத்தான் போயிருக்கார். இவர் கும்பிட்ட பழநி முருகன்தான் கைவிடாம என்னை மாதிரி ஒரு நல்ல பெண்ணை  இவருக்கு ஜோடி ஆக்கியிருக்கார்'' என 'தனக்குத்தானே’ ஸ்கோர் செய்துகொள்கிறார்.
''நீ சொன்னா சரிதான் கண்ணு... உன் பேச்சுக்கு மறுபேச்சு உண்டா செல்லம்?'' என விதார்த் சொல்ல, ''உங்களுக்கு எப்பவும் கலாட்டாத்தான். பேசிட்டு இருங்க. தோ வந்துர்றேன்'' என கிச்சனுக்குள் செல்கிறார் காயத்ரி.  
''போட்டோ பார்த்துப் பேசிப் பழகினதுல ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்பப் பிடிச்சிருச்சு. அவங்க கூட்டுக் குடும்பம், நாங்களும் கூட்டுக் குடும்பம். ரெண்டு குடும்பத்துக்கும் பரஸ்பரம் பிடிச்சிருச்சு. திருப்பதியில கல்யாணம் முடிச்சுட்டு மொரீஷியஸ், கேரளா, திருநெல்வேலினு பெரிய ஹனிமூன் போனோம். நான் பிறந்த இடம், அவங்க காலேஜ் படிச்ச இடம், அவங்க விரும்பிச் சாப்பிடும் ஹோட்டல்னு ஒண்ணுவிடாம நான் தெரிஞ்சுக்கிட்டேன். அவங்களும் என்னைப் பற்றி தெரிஞ்சுக்கிட்டாங்க. இப்ப பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் இருக்கோம்'' என்றபோது சுடச்சுட டீ கொண்டுவரும் காயத்ரி விதார்த்தைப் பார்க்க, பார்வையின் அர்த்தம் உணர்ந்து, ''உன்னைப் பத்திதாம்மா... நல்லவிதமா சொல்லிட்டு இருந்தேன்'' என அவர் சொல்ல, ''நம்ம்ம்பிட்டேன்!'' எனச் சிரிக்கிறார் காயத்ரி.
''ரொம்ப நல்ல ஹஸ்பெண்ட் இவர். நான் ஆபீஸுக்குக் கிளம்புறப்போ அவரே சமைச்சு டிபன் பாக்ஸ்ல போட்டுக் கொடுப்பார். கூடவே நிறையப் பழங்கள் கட் பண்ணி வெச்சுடுவார். 'நீ ஏன்ப்பா இதெல்லாம் பண்ற?’னு கேட்டா, 'என் குழந்தைக்கு நான் பண்ணாம யார் பண்ணுவா!’னு சொல்வார். உருகிருவேன். நான் எது கேட்டாலும் வாங்கித் தந்துடுவார். கோபக்காரர்தான். ஆனா, என்கிட்ட கோபமே வராது!'' என காயத்ரி சொல்ல, விதார்த் முகத்தில் மின்மினிகள்.  ''நான் நடிச்சதுல 'மைனா’ படம் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல நான் ஒரு டயலாக் சொல்வேன்... 'லவ் பண்ணுங்க சார். லைஃப் நல்லா இருக்கும்’னு. இப்ப தினமும் நான் காயத்ரியை லவ் பண்ணிட்டு இருக்கேன். லைஃப் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு'' என விதார்த் சொல்ல, காயத்ரி முகத்தில் காதல் வெட்கம்!

No comments:

Post a Comment