சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Oct 2015

போலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய கொங்கு இளைஞர் பேரவையினர்! (வீடியோ)

கோவையில் போலீசார் முன்னிலையிலேயே தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் பேரவை அமைப்பை சார்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு பொதுமக்களை விரட்டி விரட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, ராம் நகர், செங்குப்தா வீதியில் தனியார் நிறுவனத்தின் மருந்து பொருட்கள் மொத்த விற்பனையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனையகத்துக்கு மாத இறுதியில் வரும் மருந்து பொருட்கள் விற்பனை பிரதிநிதிகள், ஒட்டுமொத்தமாக மருந்து பொருட்களை பெற்று செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை ஏராளமான மருந்து பிரதிநிதிகள் விற்பனையகத்துக்கு வந்திருந்தனர். இவர்கள் அந்த சாலையில் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
அவற்றில் சில இரு சக்கர வாகனங்கள், மருந்து விற்பனையகத்துக்கு அருகே உள்ள கோவை மாவட்ட கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன்பும்  நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், அலுவலகத்தில் இருந்த கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் சிலர்,  அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை திடீரென அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதில் 6 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள் போலீசில் புகார் தெரிவித்ததோடு, கொங்கு இளைஞர் பேரவை அலுவலகம் முன்பும் கூடினர். இந்நிலையில் போலீசாரும், பத்திரிகையாளர்களும் அங்கு வந்தனர்.

இந்த நேரத்தில் கொங்கு இளைஞர் பேரவையினர் சிலர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள்தான், தங்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக மருந்து விற்பனை பிரதிநிதிகள் புகார் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென அலுவலகத்துக்குள் நுழைந்த கொங்கு இளைஞர் பேரவையினர், அங்கிருந்த அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை, மூங்கில் குச்சிகளை எடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடிக்கத் துவங்கினர்.
அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு விரட்டி விரட்டி அடித்தவர்களை, அங்கு கூடியிருந்த போலீசார் வேடிக்கை பார்த்தனர். சிறிது நேரத்துக்கு பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் சிலரை போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர். 

போலீஸ் கண் முன்னர் அரிவாள், உருட்டுக்கட்டையோடு கொங்கு இளைஞர் பேரவையினர் தாக்குதலில் ஈடுபட்ட  இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment