சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

ஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாசம், கேரளாவை அசத்தும் பிரித்விராஜ்

ப்ரித்விராஜ். கிட்டத்தட்ட மலையாளத்தில் ஒரு ரஜினி + கமல் காம்போவாக இருக்கும் மாஸ் + க்ளாஸ் நடிகர். ஃப்ளாஷ் பேக் போட்டு ஒரு 13 வருடத்திற்கு முன்பு சென்றால் ப்ரித்விராஜ் அறிமுகமான நந்தனம் படம் நிற்கும்.
தந்தை சுகுமாரன் இறந்ததால் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த ப்ரித்வி கேரளாவிற்கு வந்தார். நந்தனம் பட வாய்ப்பு கிடைக்க படத்தில் நடித்து படமும் வல்லிய ஹிட். அதன் பிறகு நடிப்பைத் தொடர்வது என முடிவெடுத்தார். அன்று தொடங்கியது ப்ரித்வியின் பயணம். தமிழில் ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு ஹீரோவின் படம் அதிகம் வரும்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித் என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வருடத்தில் ஏழு படங்களுக்கு மேல் கூட வெளியாகியிருக்கிறது. ஆனால் அதன் பின் அதிக படங்கள் வெளியிடும் அந்த ரேஸ் மேல் அக்கறை குறைந்தது. ஒரு ஸ்டார் டம் கிடைத்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த ரேஸ் மறுபடி தொடங்கியது மலையாளத்தில் ஃபஹத் ஃபாசில் மூலம். 2013 சின்னதும் பெரியதுமாக வளைத்துக் கட்டி 12 படங்கள் வெளியானது. அதே விஷயம் தான் இந்த வருடம் ப்ரித்விராஜுக்கு நடக்கிறது. 

மசாலா படங்களும், மாஸ் படங்களுமாக நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென புதுப் புது ரோல்கள் தேர்வு செய்ய ஆரம்பித்தார். சரியாக மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த போக்கிரி ராஜா மற்றும் அன்வர் போன்ற மாஸ் அட்டம்ட்டுகளுக்கு அடுத்ததாக வைத்த அடி 'உருமி'. உருமி  ப்ரித்விராஜுக்கு ஒரு சேஞ் ஓவர் கொடுத்த படம் என்று தான் சொல்ல வேண்டும். இடையில் 'ஹீரோ' போல் கமர்ஷியல் படங்கள் செய்து கொண்டே 'மஞ்சடிக்குரு', 'முன்னரியிப்பு' போன்ற தரமான படங்களில் கேமியோ ரோலும் செய்தார். மொத்த லிஸ்ட்டில் ப்ரித்விராஜின் தைரியமான முயற்சியாக பாராட்டப்பட்டதும் அதிரடி ஹிட்டானதும் 'மும்பை போலீஸ்' அதைத் தொடர்ந்து வந்த மெமரீஸ், செவன்த் டே என வரிசை கட்டி ஹிட். 

இந்த வருடம் இதுவரை வெளிவந்திருப்பது ஆறு படங்கள். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஃப்ளேவர்.
1. பிக்கெட் 43:

பொதுவாக ஒவ்வொரு எல்லையிலும் காவல் காக்கும் வீரர்களின் சின்ன இருப்பிடம் போன்ற அமைப்பு தான் இந்த பிக்கெட். இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பிரிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த பிக்கெட் 43யில் இந்திய இராணுவ வீரராக ப்ரித்விராஜ். அங்கு அவர் சந்திக்கும் பிரச்னைகளும் ப்ளாஷ் பேக்கில் அவரின் சொந்த வாழ்க்கையுமாக நகரும் படம். கச்சிதமாக அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியிருப்பார்.
2. இவிடே: 

அமெரிக்க டிடெக்டிவ் வருணாக ப்ரித்வி. தொடர்ந்து நடக்கும் சில இந்திய பெண்களின் கொலை பற்றி விசாரிக்கிறார். அந்த வழக்கில் கிடைக்கும் ஒரே ஒரு க்ளூ இறந்தவர்கள் அனைவருக்கும் க்ரிஷை (நிவின் பாலி) தெரியும். ஆனால் அவரை கைது செய்து விசாரிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. இதற்கு இடையில் குடும்ப பிரச்னை, மனைவியைப் பிரிந்து வாழும் ப்ரித்வியின் மன அழுத்தம் என வருண் கதாப்பாத்திரத்திற்கு செய்ய வேண்டிய வேலைகள் ஏராளம். அத்தனையும் அட்டகாசமாய் நிறைவு செய்திருப்பார்.
3. டபுள் பேரல்: 

சீரியஸ் பயணத்தில் சற்று வித்தியாசமான கேங்ஸ்டர் காமெடிப் படம் எடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது தான் டபுள் பேரல். விலை மதிப்பு மிக்க இரண்டு கற்கள்  அதனை வாங்கி அதிக விலைக்கு விற்க முயற்சிப்பவர்களாக ப்ரித்வியும், இந்திரஜித்தும் (ப்ரித்விராஜின் அண்ணன்). படம் தோல்வியடைந்தாலும் வித்தியாசமான முயற்சியாக பலராலும் கவனிக்கப் பட்டது. இதை ஒரு கௌரவமான தோல்வியாகத் தான் பார்க்கிறேன் என்பது ப்ரித்விராஜின் முடிவும் கூட. இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் பெரிய ஒரு மாற்றம் நிகழும், இல்லை என்றால் படு தோல்வியாக இருக்கும் இதில் எனக்கு இரண்டுமே சம்மதம் தான் என்ற முடிவு தான் இதை ப்ரித்வி கௌரவமாக கருதக் காரணம்.
4. என்னு நின்டே மொய்தீன்:

கேரளாவில் வாழ்ந்த மொய்தீனுக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிற காஞ்சனமாலாவுக்கும் இடையேயான காதல் தான் படத்தின் கதை. மொய்தீன் காஞ்சனாவுடைய தந்தை இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் காதல் தெரியும் போது மதத்தை முன்வைத்து எதிர்த்தார்கள் பெற்றோர்கள். இறுதியில் மொய்தீன் இறந்து விட காஞ்சனா இன்னும் மொய்தீனின் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் விதவையாக என்று நிறைவடையும் படம். நிஜமும் அது தான். மொய்தீனாக ப்ரித்வியின் நடிப்பைவிட காஞ்சனாவாக நடித்த பார்வதிக்கு நடிப்பதற்கு அத்தனை ஸ்கோப், அதிலும் தன்னை நிரூபித்தார் ப்ரித்வி.
5. அமர் அக்பர் ஆண்டனி:

ஒரு கமர்ஷியல் காமெடி படம். அதில் சின்ன மெசேஞ். மூன்று நண்பர்களுக்குள் நடக்கும் கலாட்டா, அவர்கள் சுற்றுலா செல்ல விரும்பும் பட்டாயா, காதல் என பல விஷயங்களை காமெடியாக சொல்லிக் கொண்டே இருக்க. இடையில் ஒரு விபரீதமும் நிகழ்கிறது. அதை மூவரும் இணைந்து சரி செய்கிறார்கள். இந்தப் படம் தேவையே இல்லை என்று எளிதாக சொல்ல முடியாது. டபுள் பேரல் போன்ற பரிசோதனை முயற்சிகளுக்கு நடுவே இப்படி படங்களையும் தேர்வு செய்து பேலன்ஸுடன் போகும் வழி ப்ரித்விக்கு தெரிந்திருப்பது இதில் விளங்கும்.

இது சும்மா டிரெய்லர் தான் என்பது போல இந்த வருடம் வெளியிட இன்னும் இரண்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அதுவும் ஏதோ ஒரு வகையில் புதிய முயற்சியாகத் தான் இருக்கும் என்பது உறுதி.

No comments:

Post a Comment