சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே.பி கூட்டணி வைக்காது!’’

முற்றுப்புள்ளி வைக்கும் முரளிதர் ராவ்
டந்த நாடாளுமன்றத் தேர்தலில் ‘வானவில் கூட்டணி’ அமைய மையப்புள்ளியாக இருந்தவர் தமிழக பி.ஜே.பி-யின் மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ். வரும் சட்டசபைத் தேர்தலை பி.ஜே.பி. எப்படி எதிர்கொள்ளப் போகிறது, என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறது என்ற கேள்விகளுடன் முரளிதர் ராவை சந்தித்தோம்.
‘‘தமிழகத்தில் பி.ஜே.பி. காலூன்ற முடிய வில்லையே... எப்படித் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறது?’’
‘‘தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாக சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தின் கலாசாரம், தனித்துவமான அடையாளம், மக்களின் நம்பிக்கை ஆகியவற்றை உணர்ந்து செயல்படுகிறோம். முன்னோடியான விஷயங்கள் மறக்கடிக்கப் பட்டிருக்கிறது. காமராஜர் வெறும் நாடார் சமூகத்தினருக்கு மட்டும் அடையாளம் அல்ல. அவர் ஒரு தலைமுறைக்கே உணவும், கல்வியும் அளித்தவர். அவர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் அமலில் இருக்கிறது. அவரை மறந்துவிட்டார்கள். விமான நிலையத்தில் இருந்து பொதுக் கழிப்பிடம் வரை நேரு குடும்பத்தினரின் பெயர்கள்தான் இருக்கின்றன. நேதாஜியோடு நெருக்கமான தொடர்பில் இருந்த பசும்பொன் தேவரை திராவிடக் கட்சிகள் மறந்துவிட்டன. அந்தச் சமூகத்தினரை ஓட்டு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர். இப்படி, தமிழகத்தின் முன்னோடி தலைவர்கள் ஆற்றிய சேவைகள் மறக்கடிப்பட்டு இருக்கின்றன.
பி.ஜே.பி., அவர்களை ஏற்றுக்கொண்டு அவர்கள் வழியில் நடக்க ஆரம்பித்திருக்கிறது. நாங்கள் ஏதோ சாதிய அரசியல் செய்வதாகச் சொல்லப்படுகிறது. நாட்டில் எங்கு பார்த்தாலும் சாதி இருக்கிறது. அதை வாக்கு வங்கி அரசியலாகப் பயன்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும்.”
“திராவிடக் கொள்கைகளைத் தாண்டி தமிழகத்தில் நீங்கள் ஆட்சி அமைக்க முடியுமா?”
“சாதி மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கைகளை தி.மு.க. பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், இப்போது குடும்ப அரசியலும், கருணாநிதி, ஸ்டாலின் என்ற தனிமனித வழிபாடும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அதேபோலதான் அ.தி.மு.க-வும் இருக்கிறது. மோசமான நிர்வாகத்தை அ.தி.மு.க. நடத்துகிறது. திராவிடக் கொள்கைகளை மக்கள் மறந்து வருகின்றனர். புதிய தலைமுறையினரிடம் திராவிட, பெரியார் கொள்கைகள் மீது ஈர்ப்பு இல்லை. அவர்கள் எல்லா இடங்களிலும் நிரம்பியிருக்கும் ஊழலை மட்டுமே பார்க்கிறார்கள். பி.ஜே.பி-தான் சரியான தலைமை என்று நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.’’
“அ.தி.மு.க-வோடு கூட்டணி அமைக்க விரும்பு வதால்தான் ஜெயலலிதாவை மோடி சந்தித்தாரா?”
“கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. எங்களுடன் பல இயக்கத்தினரும் பேசிவருகிறார்கள். எங்கள் கூட்டணியில் இணைய இருக்கிறார்கள். ஒரு வானவில் அரசியல் கூட்டணி அமையவிருக்கிறது. பிரதமர் என்கிற முறையில்தான் ஜெயலலிதாவை மோடி சந்தித்தார். அப்போது, கூட்டணி பற்றிப் பேசவில்லை. முதல்வரிடம் தமிழகத்தின் தேவைகள் குறித்து விசாரித்தார். இதைத் தவறாக சித்தரித்துப் பேசுகிறார்கள். வட, தென் துருவங்கள் இணைய வாய்ப்பே இல்லை. மோசமான நிர்வாகத்தை எதிர்த்துக் குரல் எழுப்பும் நாங்கள் எப்படி அ.தி.மு.க-வை ஆதரிப்போம்?’’
 “எம்.பி. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியின் நிலை என்ன? ராமதாஸ் முதல்வர் வேட்பாளரை அறிவித்து விட்டாரே?”
“வைகோவைத் தவிர, பிற கட்சிகள் கூட்டணியில்தான் இருக்கின்றன. விஜயகாந்த், ராமதாஸ் இருவரும், ‘நாங்கள் பி.ஜே.பி. கூட்டணியில் இல்லை’ என்று வெளிப்படையாகச் சொல்ல வில்லை. தேர்தலை ஒன்றாகச் சந்தித்ததால், எல்லா விஷயங்களிலும் அவர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என அவசியமில்லை.  ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கான பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பது அவர்களின் விருப்பம். நேரம் வரும்போது மீண்டும் இணைந்து செயல்படுவோம். அரசியலில் தனித்தனி நிலைப்பாடுகள் எடுத்தால்தான் பேச்சுவார்த்தை நடத்தி சீட் வாங்க முடியும். அதைத்தான் அவர்கள் செய்கிறார்கள். நாங்கள் அதைத் தடுக்கவில்லை.”
“வைகோ இணைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டு இயக்கத்தின் வெற்றி வாய்ப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
“வைகோ எடுத்திருக்கும் முடிவுக்கு அவரே வருந்தி இருப்பார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசியக் கட்சிகள் என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டன. அப்படி இருக்கையில் அவர்களுடன் கூட்டணிச் சேருவது எப்படிப்பட்ட முடிவைத் தரும் என்பதை அவர் உணரவில்லை. வைகோ சரியான மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை சீக்கிரம் உணர்வார்.”
“ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தால் மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?”
“ஸ்டாலினின் பயணம் பி.ஜே.பி-க்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. ‘ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று அவரை மாற்றித் தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்’ என்று அவர் பேசி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது என்னென்ன ஊழல்கள் நடந்தன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். ஸ்டாலின் பயணத்தின் மூலம் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அது பி.ஜே.பி-க்கு மறைமுகமாக உதவும்.’’
“சிறுபான்மையினரை அழித்துவிட்டு இந்தியாவை இந்து நாடாக்கப் பார்க்கிறது என பி.ஜே.பி. மீது குற்றம்சாட்டப் படுகிறதே?”
“இந்தியாவில் முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு இருக்கிறது. அவர்களின் வழிபாட்டுத்தலங்களும் அதிகரித்து வருகின்றன. நாங்கள் அவர்களை அழிக்க நினைக்கிறோம் என்பது தவறு. பி.ஜே.பி-யைப் பிடிக்காதவர்கள்தான் இப்படி பரப்புகிறார்கள். எல்லா மதங்களோடு சேர்ந்துதான் இந்தியா என்கிற நாடு இருக்க வேண்டும். அதை அழித்துவிட்டால், இவர்கள் எங்கு போய் வாழ்வார்கள்? சிறுபான்மை மக்களுக்காக போராடுகிறோம் எனச் சொல்லும் யாருமே இந்துக்களைப் பற்றி வாய் திறப்பதுகூட இல்லை.’’


No comments:

Post a Comment