சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

உலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப் பாசம்!

மிஸ் தாய்லாந்து அழகி பட்டம் வென்ற இளம்பெண், குப்பைத் தொட்டிகளைக் கழுவி சுத்தம் செய்யும் வேலை பார்க்கும் தனது தாயிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படம் வைரலாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றி பெற்று அழகு ராணியாக முடிசூட்டப்பட்டார். பின்னர் அவர், அழகிப் போட்டி  நிகழ்ச்சி முடிந்த உடன்  அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல,  மேற்குலக மக்களையும் நெகிழச் செய்துள்ளது.
தாய்லாந்து அழகி மின்ட்டின்  தாயார், பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி அதில்  கிடைக்கும் பணத்தில்தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். 'கடும் கஷ்டத்திற்கு மத்தியில் தன்னை வளர்த்து ஆளாக்கியதற்காகவே  நன்றிப் பெருக்கோடு  நான் அவர் காலில் விழுந்தேன்' என்று  கூறி, உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார் மின்ட். 


No comments:

Post a Comment