சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

சென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது!

ரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே இரு அணிகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக டெல்லியில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்கள் அடுத்து உருவாகவுள்ள புதிய ஐ.பி.எல். அணியில் நேரடியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டு எடுத்து கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பி.சி.சி.ஐ செயற்குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத இறுதிக்குள் புதிய இரு அணிகள் உருவாக்கப்பட்டு விடும். அடுத்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடரில் இடம் பெறும் அணிகள் சென்னை மற்றும் ராஜஸ்தானை மையமாக கொண்டே உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட்டில் சென்னை போன்ற பிரமாண்டமான நகரத்தை ஒதுக்கி விட்டு ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தி விட முடியாது என்பதை பி.சி.சி.ஐ. நன்றாகவே உணர்ந்துள்ளது. அதேபோல் ஜெய்ப்பூர் மையமாக கொண்டு மற்றொரு அணியும் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏனென்றால் இப்போதைக்கு சென்னை அணிக்கென்றும் ராஜஸ்தான் அணிக்கென்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகி விட்டார்கள். எனவே புதிய நகரில் இருந்து அணிகள் உருவாக்கப்பட்டால் அவற்றிக்கு வரவேற்பு கிடைக்குமா? என்ற ஐயமும் பி.சி.சி.ஐ.யிடம் உள்ளது. 

No comments:

Post a Comment