சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2015

ஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை!

பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் கடைகளில் இருந்து அதிகாரிகள் யாரும் ஓ.சி. பட்டாசு வாங்க கூடாது என்று விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை மீறி ஓ.சி. பட்டாசு வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.
சீன பட்டாசு வருகையால், சிவகாசி பட்டாசு தொழில் நலிந்து வருவதாகவும், இதனால் அரசுத்துறை அதிகாரிகள் ஓ.சி. பட்டாசு கேட்டு வரவேண்டாம் என்றும் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சமீபத்தில் நெத்தியடியாக வேண்டுகோள் விடுத்து, அது தொடர்பான போஸ்டர்களையும் ஒட்டியிருந்தது. இருந்தது. இது தொடர்பான செய்தி விகடன் டாட் காமில் வெளியானது. இது பற்றி உயர் அதிகாரிகள் வரை புகார் சென்றது.
இதை தொடர்ந்து,  விருந்துநகர் மாவட்ட கலெக்டர் ராஜாராமன், அவசர அவசரமாக நேற்று முன் தினம்  கலெக்டர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சிவகாசி தாசில்தார் உள்பட அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர், ''அதிகாரிகள் யாரும் ஓ.சி. பட்டாசு கேட்டு பட்டாசு ஆலைகளுக்கோ, பட்டாசு கடை ஏஜென்ட்களிடமோ செல்லக்கூடாது.

இதையும் மீறி ஓ.சி. பட்டாசு வாங்கும் அதிகாரிகள் பற்றி புகார் வந்தால் அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். அதே நேரம், தலைமைச்செயலகம் உள்பட வேறு உயர் அதிகாரிகளிடம் இருந்து ஓ.சி. பட்டாசு கேட்டு வந்தால் அது பற்றி என்னிடம் தகவல் சொல்லுங்கள்.
நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். மேலும், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சீன பட்டாசு இருக்கிறதா என்பது பற்றி அதிரடி சோதனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்" என்று அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நேற்று சிவகாசி பகுதியில், சிவகாசி தாசில்தார் அய்யாகுட்டி, தனி தாசில்தார் உமாமகேஸ்வரி ஆகியோர் தலைமையில் அடங்கிய தீயணைப்பு படையினர் மற்றும் சிவகாசி டி.எஸ்.பி. வெள்ளையன் ஆகியோர் தனித்தனியாக பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு ஏஜென்ட், கடைகளுக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.
இதில், சாத்தூர் ரோட்டில் உள்ள ஜீவஜோதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஏஜென்சியில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக பட்டாசுகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து அந்த பட்டாசு ஏஜென்சிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தற்போது சிவகாசி பகுதியில் அதிகாரிகள் கடும் சோதனை நடத்தி வருவதால், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மற்றும் பட்டாசு ஏஜென்சி உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment