சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Oct 2015

கடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனடி நிறைவேற்றம்... மகிழ்ச்சியில் திழைத்த 3-ம் வகுப்பு மாணவன்!

போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டு வந்த 3-ம் வகுப்பு மாணவன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினான். அவனது கடிதத்துக்கு உடனடியாக பதில் அளித்த பிரதமர், கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றினார்.
 
பெங்களூரு வித்யாரண்யபுரா தொட்டபொம்மசந்திரா பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுவன் அபினவ் பள்ளிக்கு செல்லும்போது போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தினமும் அவதிப்பட்டு வந்தான். யஷ்வந்தபுராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவன் இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு என்று தனது தாத்தாவிடம் கேட்டுள்ளான்.

அப்போது, அவனது தாத்தா, பிரதமருக்கு கடிதம் எழுத ஆலோசனை கூறியுள்ளார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, அபினவ் கடிதம் எழுதினான். அதில், “கொரகுண்டேபாளையா வெளிப்புற சாலையில் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் பாதியிலேயே நின்றுவிட்டதால் அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு நான் செல்ல 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தான்.

உடனடியாக பிரதமரிடம் இருந்து அந்த சிறுவனுக்கு பதில் கடிதம் வந்தது. அதில் அந்த ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே மேம்பால கட்டுமான பணிகளை விரைவாக முடிக்கும்படி ரயில்வே துறை அதிகாரிகளுக்கு நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

இது பற்றி அபினவ் கூறுகையில், "நான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றான்.

No comments:

Post a Comment