தமிழகத்தில் வலுத்து வரும் மதுவிலக்குப் போராட்டங்களையடுத்து, கோவில், பள்ளிகள், குடியிருப்பு பகுதிகள் அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை மூடுவது குறித்த 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காந்தியவாதி சசிபெருமாள், மதுவிலக்கு போராட்டம் நடத்தி உயிரிழந்த சம்பவம், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வலுத்து வருவதால், தமிழக அரசு, மதுக்கடைகளைக் குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக கடந்த வியாழக்கிழமை இரவு ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அதற்கான பணிகளைச் செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
"நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை? பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? கட்டிட உரிமையாளர் ஆட்சேபணை தெரிவிக்கும் மதுக்கடைகள் எத்தனை? பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் எத்தனை?
மாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் 50 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.75 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.50 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
கிராமப்புறங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.30 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து கணக்கெடுத்து, அதை உடனடியாக இ-மெயில் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் எதிரொலியாக, விரைவில் 6 ஆயிரத்து 856 கடைகளில், சுமார் 500 முதல் 1,000 கடைகள் வரை மூடப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 500 முதல் 1,000 கடைகளை இனங்கண்டு மூடுவதால், எவ்வளவு விற்பனை குறையும்? என்பது குறித்தும், கணக்கெடுப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் வரும் வருமானம், அதற்கு அருகில் இருக்கும் கடைக்கு வருமா? என்பது குறித்தும் மாவட்ட மேலாளர்களை கணக்கெடுத்து அனுப்ப உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை என்று நிர்ணயம் செய்தால், எவ்வளவு விற்பனை குறையும் என்பது குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
கணக்கெடுக்கப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளம் இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே கணக்கெடுப்பின்படி, கடைகளை தமிழக அரசு மூடினால், சம்பளத்துக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று பணியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தற்போது வரை மூடப்படும் நிலையில் கோவையில் 150 கடைகள், சேலத்தில் 122 கடைகள், மதுரையில் 112 கடைகள், திருச்சியில் 65 கடைகள், சென்னையில் 119 கடைகள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக கடந்த வியாழக்கிழமை இரவு ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அதற்கான பணிகளைச் செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுக்கடைகளை அதிரடியாகக் குறைப்பதற்கு, மாவட்டங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்ட மேலாளருக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
"நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் எத்தனை?, வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகள் எத்தனை? பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? மருத்துவமனைகளுக்கு அருகில் இருக்கும் கடைகள் எத்தனை? கட்டிட உரிமையாளர் ஆட்சேபணை தெரிவிக்கும் மதுக்கடைகள் எத்தனை? பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் உள்ள கடைகள் எத்தனை?
மாநகராட்சி எல்லைகளுக்குட்பட்ட பகுதியில் 50 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.75 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?, நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 100 மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.50 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு?
கிராமப்புறங்களில் 5 கிலோ மீட்டர் இடைவெளி தொலைவில் ரூ.30 ஆயிரம் வரை மது விற்பனையாகும் கடைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது குறித்து கணக்கெடுத்து, அதை உடனடியாக இ-மெயில் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் எதிரொலியாக, விரைவில் 6 ஆயிரத்து 856 கடைகளில், சுமார் 500 முதல் 1,000 கடைகள் வரை மூடப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 500 முதல் 1,000 கடைகளை இனங்கண்டு மூடுவதால், எவ்வளவு விற்பனை குறையும்? என்பது குறித்தும், கணக்கெடுப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் வரும் வருமானம், அதற்கு அருகில் இருக்கும் கடைக்கு வருமா? என்பது குறித்தும் மாவட்ட மேலாளர்களை கணக்கெடுத்து அனுப்ப உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், டாஸ்மாக் மதுபானக்கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9.30 மணி வரை என்று நிர்ணயம் செய்தால், எவ்வளவு விற்பனை குறையும் என்பது குறித்து அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.
கணக்கெடுக்கப்பின் மூலம் மூடப்படும் கடைகளில் பணியாற்றும் சுமார் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பளம் இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே கணக்கெடுப்பின்படி, கடைகளை தமிழக அரசு மூடினால், சம்பளத்துக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று பணியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, தற்போது வரை மூடப்படும் நிலையில் கோவையில் 150 கடைகள், சேலத்தில் 122 கடைகள், மதுரையில் 112 கடைகள், திருச்சியில் 65 கடைகள், சென்னையில் 119 கடைகள் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு
இந்நிலையில் மேற்கூறிய கடைகளை குறைப்பது தொடர்பான 3 அறிவிப்புகளை முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் உறுதிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயலலிதா வரும் பதினைந்தாம் தேதி, பார்களை மூடுகிறேன். பள்ளிக்கூடம் சர்ச் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடுகிறேன், அங்கு விற்பனை நேரத்தை மூடுகிறேன் என மூன்று அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்.
இத்தனை நாட்கள் இந்த இடத்தில் மதுக்கடைகள் இருந்தது ஜெயலலிதாவிற்கு தெரியாதா. இத்தனை நாட்கள் என்ன செய்தார்கள்,. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க இலவசங்கள். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க ஊழல் பணம். நாலுமணி நேரம் மதுக்கடைகளை திறக்காவிடில் அ.தி.மு.க காரனை கொள்ளையடிக்க வழி பண்றீங்க. குடிக்கிறவன் கடையில சரக்கு இல்லையினா எங்கடா கிடைக்கும்னா செயலாளர் வீட்டுல கிடைக்கும்பான், ஜெ பேரவை செயலாளர் வீட்ல கிடைக்கும்பான். கூட முன்னூறு ரூபாய் குடுத்து வாங்குவான். குடிக்கனும் நெனைச்சா அஞ்சி கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் போய் குடிச்சிட்டு வந்துருவான், அதனால் இந்த பித்தலாட்ட அறிவிப்பெல்லாம் வேண்டாம். எனக்குத்தான் பக்கத்துலேயே ஆட்கள் இருக்காங்களே. இப்ப யார் யாரை சந்தேகப்படப்போறாங்களோ தெரியல" என்றார்.
இத்தனை நாட்கள் இந்த இடத்தில் மதுக்கடைகள் இருந்தது ஜெயலலிதாவிற்கு தெரியாதா. இத்தனை நாட்கள் என்ன செய்தார்கள்,. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க இலவசங்கள். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்க ஊழல் பணம். நாலுமணி நேரம் மதுக்கடைகளை திறக்காவிடில் அ.தி.மு.க காரனை கொள்ளையடிக்க வழி பண்றீங்க. குடிக்கிறவன் கடையில சரக்கு இல்லையினா எங்கடா கிடைக்கும்னா செயலாளர் வீட்டுல கிடைக்கும்பான், ஜெ பேரவை செயலாளர் வீட்ல கிடைக்கும்பான். கூட முன்னூறு ரூபாய் குடுத்து வாங்குவான். குடிக்கனும் நெனைச்சா அஞ்சி கிலோமீட்டர் தள்ளி இருந்தாலும் போய் குடிச்சிட்டு வந்துருவான், அதனால் இந்த பித்தலாட்ட அறிவிப்பெல்லாம் வேண்டாம். எனக்குத்தான் பக்கத்துலேயே ஆட்கள் இருக்காங்களே. இப்ப யார் யாரை சந்தேகப்படப்போறாங்களோ தெரியல" என்றார்.
No comments:
Post a Comment