சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Aug 2015

ராஜபக்சேவை மூக்குடைத்த பிரதமர் ரணில்! (வீடியோவை பாருங்கள்)

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ராஜபக்சே, ரணிலுக்கு கைகொடுத்த போது அதனை அவர் கண்டுகொள்ளாமல் சென்ற சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று (21ஆம் தேதி) இலங்கைப் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது.

அதிபர் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்பட அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர். 

பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள வந்த ரணில் விக்ரமசிங்கே, முன் வரிசையில் இருந்தவர்களை சந்திக்க சென்றார். அப்போது அனைவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்றனர். அதைத் தொடர்ந்து ராஜபக்சேவும் எழுந்து நின்றார்.  அவர் அருகே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நடந்து சென்றார். உடனே ராஜபக்சே சிரித்துக் கொண்டே அவருக்கு கைகொடுத்தார். ஆனால் ரணில் விக்ரமசிங்கே அதை காணாதவர் போல் கை கொடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இச்சம்பவம் ராஜபக்சேவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. 

முன் வரிசையில் இருந்த புத்த குருமார்களுக்கு முதலில் ரணில் விக்ரமசிங்கே கைகொடுத்து வாழ்த்து பெற்றார். பின்னர் திரும்பி வந்த ரணில், ராஜபக்சேவுக்கு கைகொடுத்து வணக்கம் தெரிவித்தார்.  

பெளத்த முறைப்படி மத குருமார்களிடம் ஆசிகளைப் பெற்ற பின்னரே அனைவருக்கும் கைகொடுத்து வணக்கம் செலுத்துவது இந்நாட்டில் உள்ள வழக்கம் என்று கூறப்படுகிறது. இதனாலேயே, ராஜபக்சே கைநீட்டியும் ரணில் கண்டுகொள்ளாமல் சென்றார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.



No comments:

Post a Comment