சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Aug 2015

தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விரைவில் ஓய்வு பெற இதுதான் காரணம்!

விராட் கோலி நல்ல கேப்டனாக உருவாக வாய்ப்பளிக்கும் வகையில்தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி விரைவில் ஓய்வு அறிவித்ததாக இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் தோனி, உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துடன் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி இவ்வளவு விரைவாக ஓய்வு அறிவித்தற்கான காரணத்தை, தற்போது இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி வெளியிட்டுள்ளார்.   

இது தொடர்பாக ரவி சாஸ்திரி, '' கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை கடந்து தற்போது  டி 20 என மூன்று வகையாக விளையாடப்படுவதையடுத்து  தோனி, அதில் உள்ள கடினத்தை உணர்ந்து கொண்டார். அதே வேளையில் அணியை வழிநடத்த, விராட் கோலி தயாராகி விட்டதையும் தோனி தெரிந்து கொண்டார். இதையடுத்து விராட் கோலிக்கு தக்க தருணத்தில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்து விட்டு, தோனி ஒதுங்கி கொண்டார்.

தோனியின் முடிவு நல்லதொரு முடிவு ஆகும். தோனியின் ஓய்வுக்கு பிறகு, விராட் கோலிதான் அந்த இடத்திற்கு வரத் தகுதி வாய்ந்தவராக இருந்தார். காலம் செல்ல செல்ல விராட் கோலி வெற்றி கேப்டனாக வலம் வருதை நீங்கள் காண முடியும்.  ஒவ்வொரு கேப்டனக்கும் ஒரு ஸ்டைல் உள்ளது. விராட் கோலி எதிலும் சிறந்து விளங்கக் கூடியவர் '' என்றார்.

No comments:

Post a Comment