சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Aug 2015

இலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய இஷாந்த் சர்மாவுக்கு அபராதம்

லங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் விதத்தில் களத்தில் செயல்பட்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 65 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் இந்திய- இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதற்கிடையே முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. அப்போது இஷாந்த் சர்மா தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. 


கடந்த சனிக்கிழமை திரிமண்ணேவையும் தொடர்ந்து சண்டிமாலையும் இஷாந்த் அவுட் செய்தார். அப்போது அவர் நடந்து கொண்ட விதம் விதிமுறைகளுக்கு எதிரானது என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. திரிமண்ணேவை ஸ்லெட்ஜிங் செய்யும் வகையில் நடந்து கொண்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதமும் சண்டிமாலை வெறுப்பேற்றியதற்காக 50 சதவீதமும் இஷாந்த் சர்மாவுக்கு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2வது டெஸ்ட் போட்டிக்கான கட்டணத்தில் 35 சதவீதம் மட்டுமே இஷாந்த் சர்மாவுக்கு சம்பளமாக கிடைக்கும். 
இந்த போட்டியில் இஷாந்த் சர்மா பந்தில்  திரிமண்னே விக்கெட் கீப்பர் சகாவிடன் பிடி கொடுத்தார். நடுவர் 'அவுட்' என கை உயல்த்தியும் திரிமண்னே வெளியேறாமல் களத்திலேயே நின்றார். கடைசியில் தலையை அசைத்தபடியே வெளியேறினார். இவரின் இந்த செயல் ஐ.சி.சி.யின் வீரர்களின் நடத்தை விதிமீறல் ஆகும். இதற்காக திரிமான்னேவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 



No comments:

Post a Comment