சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

21 Aug 2015

முகத்தை மறைக்காத பெண்கள் கல்லால் அடித்து கொலை: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்!

முகத்தை மறைக்க திரை அனியாத  பெண்களை கல்லால் அடித்து கொலை செய்து வெறிச்செயலில் ஈடுபட்டு உள்ளனர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய நாடாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் கட்டுபாட்டில் இருக்கும் நகரங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடுமையான தண்டனைகளை நிறைவேற்றி வருவதாக குர்தீஷ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாக ஈராக் ஊடகங்கள் தகவல் வெளியிட்டு உள்ளன.

கடந்த ஒரு மாததிற்கு முன், ஒரு பெண் திருமணத்தின் போது கன்னி இல்லை என்பது தெரிந்ததால் அந்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யபட்டார். இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட மொசூல் நகரில் உள்ள கிலானி முகாமில் 5 பெண்கள் முகத்தை மறைக்க திரை அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக அந்த 5 பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் கல்லால் அடித்து கொலை செய்து உள்ளனர்.



No comments:

Post a Comment