சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Aug 2015

வெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்சந்த்!

ஹாக்கி ஜாம்பவான் தயான்சந்தின் பிறந்த தினமான இன்று இந்திய விளையாட்டுத்தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் தயான் சந்த் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை பார்க்கலாம்

இந்திய ராணுவத்தின் தனது 16வது வயதில் இணைந்த தயான்சந்த், நிலவொளியில் ஹாக்கி பயிற்சியில் ஈடுபடும் வழக்கம் கொண்டவர். இதனால்தான் தயான் சிங் என்ற இயற்பெயருடன் 'சந்த்' என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.' சந்த் 'என்றால் ஹிந்தி மொழியில் நிலவு என்று அர்த்தம். 'சந்த் பாய்' என்று சக வீரர்கள் அழைக்க இயர் பெயரான தயான் சிங்கில் இருந்து சிங் மறைந்து தயான் சந்த் என்று ஆகி விட்டது.

1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தயான்சந்த் மொத்தம் 14 கோல்களை அடித்தார். இந்திய ஹாக்கி மந்திரவாதி ஆம்ஸ்டர்டாமில் மேஜிக் செய்கிறார். தவறாமல் பார்க்க வாருங்கள் என்று ஆம்ஸ்டர்டாம் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. 

1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்க அணியை 24-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் தயான் சந்த் 8 கோல்கள் அடித்தார். இவரது சகோதரர் ரூப்சிங் 10 கோல்களை அடித்தார். இந்த தொடரில் இந்திய அணி மொத்தம் 35 கோல்களை அடித்தது. இதில் 25 கோல்கள் தயான், ரூப்சிங் சகோதரர்கள் அடித்தது. 

1936ஆம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. போட்டியை காண ஹிட்லரும் வந்திருந்தார். ஜெர்மனி அணியை ஹிட்லர் முன்னிலையில் இந்தியா அணி 10 கோல்கள் அடித்து வீழ்த்தியது. போட்டி முடிந்ததும் தயானிடம் வந்த ஹிட்லர், ''ஜெர்மனிக்கு வந்து விடுங்கள் இந்திய ராணுவத்தில் மேஜராக இருக்கும் உங்களை ஜெர்மனி ராணுவத்தில் அதை விட உயர்ந்த பதவி தருகிறேன் என்றார்.  இந்திய அணியை தவிர எந்த அணிக்கும் விளையாடும் எண்ணம் இல்லை என்று நேரடியாக ஹிட்லரிடம் மறுப்பு தெரிவித்தார் தயான்.
ஒரு ஆட்டத்தில் தயான் பல முறை கோல் அடிக்க முயன்றும் முடியவில்லை. நடுவரிடம் சென்று கோல் கம்பம் சர்வதேச விதிகளின்படி அமைக்கப்படவில்லை. எனவே அளந்து பார்க்க வேண்டுமென்றார். தயானின் கூற்றுபடி கோல்கம்பத்தின் அளவில் மாறுதல் இருந்தது. 

1935ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஹாக்கி போட்டியை காண 'ரன் மெஷின்' டான் பிராட்மேன் வந்திருந்தார். தயானின் ஆட்டத்தை பார்த்து கிரிக்கெட்டில் ரன் அடிப்பது போலல்லவா தயான் கோல் அடிக்கிறார் என்று வியப்படைந்தார்.

நெதர்லாந்தில் ஒரு முறை தயானின் ஹாக்கி மட்டை உடைத்து உள்ளே ஏதாவது காந்தம் இருக்கிறதா? என்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தயான் சந்துக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில்  தயானுக்கு 4 கைகளுடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கைகளிலும் அவர் ஹாக்கி மட்டையை பிடித்திருப்பார். பொது இடம் ஒன்றில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய விளையாட்டு வீரர் தயான்தான்.

இத்தகைய பெருமை வாய்ந்த தயானுக்கு பாரத ரத்னா விருது வழங்காமல், மற்றொருவருக்கும் வழங்கப்படுவதும் சாத்தியமாவது இந்தியாவில் மட்டும்தான். 



No comments:

Post a Comment