சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Aug 2015

இந்திய அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது!

லங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 111 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அணி 201 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கொழும்பு நகரில் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது.  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரஹானே 8 ரன்களில் வெளியேறினார்.

தொடக்க ஆட்டக்காரர் புஜாரா மட்டுமே பொறுமையுடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 145 ரன்கள் எடுத்தார். சர்வதேச அரங்கில் புஜாரா அடிக்கும் 7வது சதம் இதுவாகும். இவருக்கு பக்கபலமாக இருந்த மிஸ்ரா அரைசதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 312 ரன்கள் எடுத்தது.  இலங்கை வீரர் பிரசாத் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இலங்கை அணியும் முதல் இன்னிங்சில் மள மளவென்று விக்கெட்டுகளை இழந்தது. இஷாந்த் சர்மாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கையின் முன்னணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட் பறிகொடுத்தனர்.  இலங்கை அணி 201 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.இலங்கை  அணியில்  அதிகபட்சமாக பெரைரா 55 ரன்களும், ஹெராத் 49 ரன்களும் எடுத்தனர். . இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 111 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 7வது முறை.  பின்னியும் 2 விக்கெட்டுகளை கழற்றினார்.
இதற்கிடையே இந்த ஆட்டத்தின் போது இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கும் இலங்கை பேட்ஸ்மேன் ஹெராத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் கோபமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர்.
 
2வது இன்னிங்சில் இந்திய அணிக்கும் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2 பந்துகளை சந்தித்த நிலையில் புஜரா' டக் அவுட்' ஆனார். தொடர்ந்து ராகுலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். ராகுல் 2 ரன்னிலும் ரஹானே 4  ரன்னிலும் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய  அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விராட்கோலி, ரோகித் களத்தில் உள்ளனர்.இந்திய அணி 21 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
கவாஸ்கர் கருத்து
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் புஜாரா அடித்துள்ள சதத்தால் தேர்வு குழுவினருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், '' இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வரை அவுட் ஆகாமல் நின்று சாதித்தது புஜாராவின் ஆட்டத்திறமையை காட்டுகிறது. அவரது நங்கூரம் போன்ற ஆட்டம் பாராட்டத்தக்கது. ஆனால் ஏற்கனவே ஷிகர் தவான், முரளி விஜய், ராகுல் போன்ற தொடக்கவீரர்களும் அணியில் இருப்பதால் புஜாராவை என்ன செய்வது என்று தெரியாமல் தேர்வுக்குழுவினர் குழப்பத்தில் உள்ளனர்" என்றார்

ஏற்கனவே 3வது டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், தவான் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாத நிலையில்தான் இந்திய அணிக்காக மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.



No comments:

Post a Comment