சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

8 Apr 2015

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் தடை!

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், பவானி சிங் நடுநிலையாக செயல்படவில்லை. எனவே அவரை நீக்கிவிட்டு, அரசு தரப்பில் வாதாட வேறு வழக்கறிஞரை நியமிக்கும் வரை ஜெயலலிதா வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், பானுமதி கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர் அர்ஜூனா, சண்முகசுந்தரம் ஆகியோரும், ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன், துள்சி ஆகியோரும் ஆஜராகி வாதாடினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அன்பழகன் மனு மீதான தீர்ப்பு வரும் 15ஆம் தேதி வழங்கப்படும் என்று கூறியதோடு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை 15ஆம் தேதி வரை வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். 



No comments:

Post a Comment