சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

28 Apr 2015

ஜெயலலிதா வழக்கும் சர்ச்சைக்குள்ளான பவானி சிங்கின் நியமனமும்!

ந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், இன்று டெல்லி உச்சநீதி மன்றம் பரபரப்பு உத்தரவை வழங்கியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங் முழுக்க முழுக்க ஜெயலலிதா தரப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.எனவே, இந்த மேல்முறையீட்டை மீண்டும் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது,.
 


உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் அளித்த தீர்ப்பிலும் இதையே தெரிவித்திருந்தார். ஆனால், கால தாமதத்தை தவிர்க்கும் நோக்குடன் இவ்வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியிருக்கிறது. இந்த உத்தரவு தமிழகம் மட்டுமில்லாது இந்திய அளவிலும் பெரும் எதிர்பார்ப்பு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் பவானி சிங் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது ஏன்? அவரது நியமனத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பும் எதிர்ப்பும் உண்டாகியுள்ளது என்பது குறித்தும் பவானி சிங் இந்த வழக்கில் கொண்டிருக்கும் தொடர்பையும் அறிவது அவசியமாகிறது. 

ஜெயலலிதா முதன் முறையாக கடந்த 1996 ஜூன்  முதல் 1996 ஆம் ஆண்டு வரையில் தமிழக முதல்வராக   பதவி வகித்த காலத்தில்,  ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி மனு தாக்கல் செய்தார்.பின்னர் நடந்தவை: 

1996 ஜூன் 27- விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு நீதிபதி உத்தரவு.

1996 ஆக.14- விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதா சென்னை ஹைகோர்ட்டில் மனு.

1996 செப்.7- வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு நியமனம்.
1996 செப்.18- ஜெயலலிதா மீது வழக்குபதிவு.

1996 செப்.19- ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி வீடுகளில் போலீசார் சோதனை.

1996 டிச.7- ஜெயலலிதா கைது, ஊழல் வழக்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு. 

ஜெயலலிதா வீட்டில் 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்புகள், 214 சூட்கேஸ்கள், 26 கிலோ தங்கம் வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவிப்பு. தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்ததாக ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு.

1997 ஜனவரி 3 ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை; வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைப்பு, விசாரணை தொடக்கம்.

1997 ஜூன் 4 ஊழல் தடுப்பு சட்டம் 1988, இந்திய தண்டனைச் சட்டம் 120-பி, 13(2), 13(1) (இ) ஆகியவற்றின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல். 

1997 அக்.1- சொத்து குவிப்பு வழக்கு தொடர அனுமதித்த கவர்னர் பாத்திமா பீவியின் உத்தரவுக்கு எதிரான மனு உள்ளிட்ட 3 மனுக்கள் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி. 

1999 நவம்பர் 19 ஆம் தேதி முதல் 2001 ஜூலை 18 ஆம்  தேதி முடிய விசாரணை, 259 சாட்சியங்கள் பதிவு, வாக்குமூலம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை.

2001 மே.15 தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி. முதல்வராக ஜெயலலிதா தேர்வு. டான்சி வழக்கில் 2000 ஆம்  ஆண்டில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக்  காரணம் காட்டி அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு. 

ஜெயலலிதா முதல்வராக  நியமனம் செய்யப்பட்டது, செல்லாது என உச்ச நீதிமன்றம்  அறிவிப்பு. 

2001 செப்.21 உச்ச நீதிமன்றம்   உத்தரவை ஏற்று முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகல்.

2002 பிப் 21- டான்சி வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதா வெற்றி.
2002 மார்ச் 2- தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவி ஏற்பு.
அரசு வக்கீல்கள் 3 பேர் பதவி விலகல். அதைத் தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சென்னை தனி கோர்ட்டில் 79 சாட்சிகளிடம் மறு விசாரணை. அரசு தரப்பு சாட்சிகள் சிலர் பிறழ்சாட்சி. 


2003 ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதால் வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்றகோரி தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில்  மனு.


2003 நவ. 18  சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம்   உத்தரவு.

2003 டிச.27 ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க பெங்களூரில் தனி கோர்ட்டு அமைப்பு, ஏ.எஸ்.புச்சாபுரே நீதிபதியாக நியமனம். 

2005 பிப். 19 பி.வி.ஆச்சார்யா அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமனம்.

2005 மே 9- லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கு ஆகியவற்றை ஒன்றாக விசாரிக்க கோரி ஜெயலலிதா மனு. ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்பு.

2005 ஜூலை 14- லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு வழக்கை ஒன்றாக விசாரிக்க கூடாது என கோரி க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி. லண்டன் ஹோட்டல் வழக்கு வாபஸ். 

2010 - தமிழில் இருந்த ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு, வழக்கு ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள், குற்றப்பத்திரிகை 13 ஆயிரத்து 600 பக்கங்கள். 252 அரசு தரப்பு சாட்சிகள், 99 எதிர்த் தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு.

2011 - குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறக்கோரி அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா மனு.

2011 அக். 20, 21- ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம்.

2011 நவ. 21, 22- மீண்டும் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம், தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி வாக்குமூலம்.

2012 அக். 12- அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா பதவி ராஜினாமா. 

2013 பிப்.2 - அரசு சிறப்பு சிறப்பு வழக்கறிஞராக பவானிசிங் நியமனம்.

2013 ஆக. 13- அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை நீதிபதி 
பாலகிருஷ்ணா ஏற்பு.

2013 ஆக. 23- குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கும்படி தி.மு.க. கர்நாடக உயர்நீதி மன்றத்தில்  மனு.

2013 ஆக. 26- அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவு. நீக்கத்தை எதிர்த்து பவானி சிங் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

2013 செப்.30  பவானி சிங்கை நீக்கிய கர்நாடக அரசின் உத்தரவு உச்ச நீதிமன்றத்தில் ரத்து. தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் 25 நாட்கள் இறுதி வாதம். 

சசிகலா வக்கீல் மணிசங்கர் 9 நாட்கள்,

சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பு வக்கீல் அமித் தேசாய் 8 நாட்கள் இறுதி வாதம். 

தொடர்ந்து பவானி சிங் 15 நாட்கள் இறுதி வாதம்.

2014 ஆக.28- சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம்  தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவிப்பு. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் ஆஜராக உத்தரவு.

2014 செப். 16- சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பின் தேதி 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அறிவிப்பு. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தனி கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்துக்கு மாற்றியும் நீதிபதி உத்தரவு.

2014 செப்.27- சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு.

பின்னர் நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பால் ஜெயலலிதா சசிகலா சுதாகரன் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டனர்.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் மேல்முறையீடு மனு செய்தது ஜெயலலிதா தரப்பு.அதில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அது தொடர்பான வழக்கு தீவிரமடைந்தது.

இந்நிலையில், உச்ச நீதி மன்றம் பவானி சிங் நியமிக்கப்பட்டது  குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. ‘‘ பவானிசிங்கின் நியமனம் சட்டவிரோதமானது; வழக்கை திசை திருப்பும் நோக்கம் கொண்டது. இவ்வழக்கில் அவசர அவசரமாக பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்து கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பாக கர்நாடக அரசுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த வழக்கில் இல்லாத குழப்பமான சூழ்நிலையைத்  தமிழக அரசு அதற்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பவானிசிங்கை நியமித்தது மிகவும் துரதிருஷ்டவசமானது’’ என்று கூறி இருக்கிறது.


அதே நேரத்தில் தமிழக எதிர்க் கட்சிகள், பவானிசிங் நியமனத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்காக அவரது வழிகாட்டுதலில் நடைபெறும் அரசே அரசு வழக்கறிஞரை நியமித்தது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இதற்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தான் பொறுப்பேற்க வேண்டும். அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தது சட்டத்தை வளைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் ஆகும் என்று குறிப்பிட்டு இருக்கின்றன. திமுக தலைவர் கருணாநிதியும்,நீதி நிலைக்க வேண்டும். இன்றைக்குக் கிடைத்த தீர்ப்பை நேர்மைக்கும், நியாயத் திற்கும் கிடைத்த வெற்றி என்று தான் சொல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மொத்தத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இன்னொரு பாய்ச்சலுக்குச்  சென்றுள்ளது.



No comments:

Post a Comment