சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Apr 2015

ஐ.பி.எல்: சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது

முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் எடுத்தது.



சென்னை அணி சார்பில் சிமித், டிபிளிசிஸ், டோனி ஆகியோர் 30 ரன்களை கடந்தனர். புதுமாப்பிள்ளை ரெய்னா 4 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். டெல்லி அணி சார்பில் கல்டர் நைல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனை தொடர் விளையாடியா டெல்லி அணி அனைத்து விக்கெட்டுகளும் மளமள அவுட்டாக மோர்க்கல் மட்டும் நிலைத்து விளையாடி அரை சதம் அடித்தார். கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மோர்க்கல் 4 ரன்கள் அடித்தார். 

முடிவில் டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை எடுத்தது. சென்னை அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
25ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை அணி வீரர் ஆஷிஷ் நெகரா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



No comments:

Post a Comment