சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Jan 2015

மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு: பரபரப்பு தகவல்கள்!

இலங்கை அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்துவிட்டுப்போன ரூ.1500 கோடியை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில்  2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8 ஆம் தேதி நடந்த தேர்தலில் 3 ஆவது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேனா, இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்று பதவியேற்று உள்ளார்.


தேர்தலில் தோல்வியடைவது உறுதி என அறிந்ததும், ராணுவத்தின் மூலம் மீண்டும் ஆட்சியைக்  கைப்பற்ற எண்ணியதாக ராஜபக்சே மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக புதிய அரசு விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளது.

இந் நிலையில் அலரி மாளிகை எனப்படும் அதிபர் மாளிகையில் ரகசிய அறை ஒன்றில் இருந்த ரூ.1,500 கோடி பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதில் இலங்கை ரூபாய் நோட்டுகளும், பல்வேறு வெளிநாட்டு கரன்சிகளும் இருந்தன.

இதன்மூலம் ராஜபக்சே ஆட்சியில் இருந்த போது, அதிகாரத்தைப்  பயன்படுத்தி கோடிக்கணக்கான பணத்தைக்  கொள்ளையடித்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இந்த பணத்தை ராஜபக்சே குடும்பத்தினர் மறந்து வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப் படுகிறது.

இவ்வாறு அவர்கள் விட்டுச்சென்ற பணமே இவ்வளவு என்றால், அவர்கள் எடுத்துச் சென்ற தொகை எவ்வளவு   என அதிபர் மாளிகை அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது பற்றி உரிய  விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே ராஜபக்சே குடும்பத்தினர் அரசின் பாதுகாப்பு நிதியத்தில் இருந்து பெருமளவு பணத்தை எடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு நிதியத்தின் தெப்ரபேன் கிளையில் இருந்த ரூ.20 ஆயிரம் கோடி பணத்தில், தற்போது வெறும் ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே இருப்பதாகத்  தெரிய வந்து உள்ளது.

இதன் மூலம் ராஜபக்சே குடும்பத்தினர் சுமார் ரூ.13 ஆயிரம் கோடியை அபகரித்து இருப்பது தெரிய வந்து உள்ளது என்றும், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சராக  இருந்த ராஜபக்சே எவ்வித ஆவணமும் இன்றி இந்தப்  பணத்தை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாபெரும் நிதி மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிபர் வட்டாரம் கூறுகிறது.





No comments:

Post a Comment