சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Dec 2015

மது கொள்கை : கேரளாவிடம் இருந்து பாடம் கற்குமா தமிழகம்?

கேரள அரசாங்கம் அமல்படுத்திய மதுவிலக்கை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மதுவிலக்கை மாற்ற இயலாது என்பதை அடிப்படையாகக் கொண்ட அந்தத் தீர்ப்பு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை நன்கு விளக்குவதாக அமைந்துள்ளது.
கேரள அரசாங்கத்தின் மதுவிலக்கு, தங்கள் வணிகச் சுதந்திரத்தைத் தடை செய்வதாக அமைந்துள்ளது என்று, பார் உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தீர்ப்பின் தன்மை குறித்து விளக்கியது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் 
 
*இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 (1)(ஜி) யின் கீழ், மது விற்பனை செய்யும் எந்த வணிக 
நிறுவனத்திற்கும், பாதுகாப்புப் பிரிவுகள் இல்லை.

*காரணமில்லாதத் தடை’ என்பது மதுபான விற்பனைக்குப் பொருந்தாது.

*மது அருந்துவதற்கான ‘பார் வசதிகள்’ கொண்ட நிறுவனங்கள் அந்த மதுவகத்தைச் சுத்தமும் 

சுகாதாரமும் கொண்டதாக அமைத்திருந்த போதிலும், தடை செய்யும் உரிமை அரசாங்கத்திற்கு உண்டு.

* மதுக்கடைகளின் சுகாதாரம் நல்ல முறையில் அமைக்கப்பெற்ற போதிலும், மது அருந்துவது மக்களின் நலக் கேடு என்பதால், அதைத் தடை செய்ய, வேறொரு காரணம் தேவையில்லை.

*இதனால் சுற்றுலாத்துறை பாதிப்படையும் என்ற வாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதி விக்ரமஜித் சென் தெரிவித்தது :-‘”இந்த நாட்டின் சுற்றுலாத் துறை மது விற்பனையை நம்பி இயங்கவில்லை; மது அருந்த வேண்டும் என்பதை முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு யாரும் கேரளச் சுற்றுலாத்துறைக்கு வருவதில்லை; இதன் மூலம் சுற்றுலாத்துறை சுத்தமடையுமே அன்றி பாதிப்படையாது.
சின்னச் சின்ன வயதுடையப் பள்ளி மாணவர்களெல்லாம் மதுக்கடை வாசலில் காத்துக்கிடக்கும் அவல நிலையை ஒப்பிடும் போது சுற்றுலாத்துறையின் மாற்றம் பெரிதல்ல.”பீகாரில் நிதீஷ், கேரளாவில் சாண்டி என முதல்வர்கள், மதுவிலக்கு விவகாரத்தில் அதிரடி முடிவுகளை எடுத்து வருகின்றார். அதை உச்ச நீதிமன்றமும் ஆதரிக்கிறது;

இதிலிருந்து, தமிழகம் பாடம் கற்குமா? இல்லையேல் இன்னும் எத்தனை சசிபெருமாள்கள் சாகக் காத்திருக்கிறார்கள் என்பது காலம் பதில் சொல்ல வேண்டியக் கேள்வி. 


No comments:

Post a Comment