சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Dec 2015

சுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: ஐ. எஸ்.சிடம் தப்பித்த பெண்ணின் கண்ணீர் கதை (வீடியோ)

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஈராக்கை சேர்ந்த இளம்பெண், ஐ.எஸ் தீவிரவாதிகளை அழித்துவிடுமாறு ஐ.நா.விற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த நாதியா முராத் பாசீ தாஹா என்ற பெண்ணும் மற்றும் சில பெண்களும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைமையிடமான மோசூல் நகருக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். கொடூர கொடுமைகளுக்கு ஆளான நாதியா(21) என்ற பெண் அங்கிருந்து தப்பித்துள்ளார், இவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 'போரின் போது கடத்தப்பட்டவர்கள்'  தொடர்பாக விசாரிக்கும் 15 நபர்கள் கொண்ட குழுவிடம்,  தனக்கு நடந்தவை பற்றி கண்ணீர் மல்ககூறியுள்ளார்.

"தீவிரவாதிகளுக்கு பணிவிடை செய்ய வற்புறுத்தப்பட்ட நான், சுயநினைவை இழக்கும்வரை அவர்களால் சித்ரவதை செய்யப்பட்டேன், என்னுடைய சகோதரர்கள் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டனர்.

இனி வாழவே முடியாது என்கின்ற அளவுக்கு யாஸிதி பெண்களுக்கு கொடூரம் அரங்கேற்றப்பட்டது. இவ்வாறு பல்வேறு அட்டூழியங்களை செய்துவரும் அவர்களை அழிக்க வேண்டும்" என  அவர் கூறியுள்ளார்.

இவரின் பேச்சை கேட்ட பாதுகாப்பு கவுன்சில், ஒருபுறம் அவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எண்ணி வருந்தியபோதிலும், துணிச்சலான அவரது பேச்சை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் இவ்வழக்கை எடுத்துச் செல்ல வலியுறுத்தியுள்ளது.


No comments:

Post a Comment