சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Dec 2015

தாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற சொன்ன கபில்தேவ்!

டந்த 1986ஆம் ஆண்டு ஷார்ஜாவில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் அது. இறுதி ஆட்டத்திற்கு முன்னதாக மும்பை நிழலுக தாதா தாவூத் இப்ராஹிம் இந்திய வீரர்களின் டிரெஸ்சிங் அறைக்குள் வந்தார். அப்போது இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று இந்திய அணியின் கேப்டன் கபில்தேவுக்கு தெரியவில்லை.
அந்த சமயத்தில் டிரெஸ்சிங் அறைக்குள் தாவூத்தை பார்த்த கபில்தேவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, உடனடியாக வீரர்கள் அறையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார். கபில்தேவை பார்த்து சிரித்துக் கொண்டே தாவூத் வீரர்கள் அறையை விட்டு வெளியேறி விட்டார்.
இந்த சம்பவம் குறித்து பின்னாளில், கபில்தேவ் ஒரு பேட்டியின் போது, ''தாவூத்தை பார்த்து இவ்வாறு நான் கூறியதும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அமைதியாக வெளியேறி விட்டார். அவர் போன பிறகுதான், யாரோ என்னிடம் இவர்தான் தாவூத் இப்ராஹிம் என்று கூறினர்'' என தெரிவித்துள்ளார். 

அது மட்டுமல்ல இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா தோற்கடித்தால், அணி வீரர்கள் அனைவருக்கும் ஒரு டொயாட்டோ காரை பரிசளிக்கப் போவதாகவும் தாவூத் அறிவித்திருந்தார். ஆனால் அவரது அறிவிப்பை இந்திய வீரர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இதனை அப்போதைய இந்திய அணியின் முன்னணி வீரரான திலீப் வெங்சர்காரே ஒரு விழாவில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து, பி.சி.சி.ஐ முன்னாள் செயலாளர் ஜெயந்த் லெலே எழுதிய புத்தகமான 'கிரிக்கெட் நிர்வாகியாக நான் இருந்த காலம்' என்ற புத்தகத்தில், இவ்வாறு குறிப்பிடுகிறார்...'' இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றால், இந்திய வீரர்கள், அணி நிர்வாகிகள், அலுவலர்கள் அனைவருக்கும் டொயாட்டோ கார் பரிசளிப்பதாகவும், அதனை அவர்கள் வீட்டுக்கே சென்று வழங்குவேன்'' என்று தாவூத் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


No comments:

Post a Comment