சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

30 Dec 2015

ஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது? வெளியான ஆச்சரிய தகவல்

ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக கூட்டுப்படைகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தி வந்தாலும், ஐ.எஸ். பயத்துடன் நோக்கும் நாடு குறித்த ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
 
ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளை வான் தாக்குதலால் சிதறடித்து வருகின்றன. இதனால் சிறப்பு படையினர் தரையில் முன்னேறிச் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் கூட்டுப்படையினர் உதவி வருகின்றனர்.

இதனிடையே, சிரியாவில் தங்கியிருந்து ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் சில காலம் இருந்த ஊடகவியலாளர் ஒருவர் உலக நாடுகள் ஆச்சரியமடையும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் தரைப்படையினரை தங்களால் வெல்ல முடியும் என நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஐ.எஸ்.தீவிரவாதிகள், இந்த படையினருக்கு கொரில்லா தாக்குதல் மற்றும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் குறித்து போதிய பயிற்சி இல்லை எனவும் கூறியுள்ளனர்.
 
is
ஆனால் இஸ்ரேல் படையினருடன் நேருக்கு நேர் போரிடுவது மிகவும் கடினம் எனவும், அவர்களுக்கு கொரில்லா மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதில் தனித்திறமை இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கடும் இழப்பினை சந்தித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஈராக்கில் அவர்கள் வசமிருந்த 30 சதவிகித பகுதிகளை அந்த நாடு கைப்பற்றியுள்ளதையும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழலை சமாளிக்கவே ஐ.எஸ்.தலைமை தனது ஆதரவாளர்களை நம்பிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


No comments:

Post a Comment