சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Dec 2015

சசிகலாவுக்கு ’நம்பர்-2’ அந்தஸ்து! -வெளியாகிறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

மிழக சட்டசபைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் அனைத்து கட்சிகளிலும் சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது. கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை நடத்துவதிலும், கூடவே கூட்டணிக்கான ரகசிய தூது விவகாரங்களிலும் அனல் பறக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.,  ஆண்டு இறுதியில் (31.12.2015) நடத்தும் கட்சியின் பொதுக்குழு, செயற்குழு மீது தனிக்கவனம் விழுந்திருக்கிறது.
சென்னை திருவான்மியூரில், ஶ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்தவிருக்கிறது. சுமார் 4,500 பேர் ஒரே நேரத்தில்,  எந்தப் பகுதியில் இருந்தும் மேடையில் இருக்கும் ஜெயலலிதாவை பார்க்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான தீவிரப் பணியில் கடந்த மூன்று நாட்களாக, கட்சி அலுவலகப் பொறுப்பாளர் மகாலிங்கம் ஈடுபட்டு வருகிறார்.  ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அமைச்சர்கள் கொண்ட டீம்,  இதற்கான சூப்பர்வைசிங் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை 'எட்ட' நின்று (மட்டும்) கவனித்து,  ரிப்போர்ட் கொடுக்கும்படி மேலிடம் தரப்பில் சொல்லி விடப்பட்டிருக்கிறதாம்.

2016 தேர்தலுக்கு முன் அ.தி.மு.க எதிர்கொள்ளவிருக்கிற பொதுக்குழு என்பதால், பொதுக்குழுவின் முடிவுகள், தீர்மானங்களின் வடிவங்கள் குறித்த எதிர்பார்ப்பும் உச்சத்தில் இருக்கிறது. 'இந்தப் பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் ஏதேனும் அறிவிப்பாக வர வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கட்சி வட்டத்தில் விசாரித்தோம்.

'புலி வருது, புலி வருது கதையாக ஒவ்வொரு செயற்குழு, பொதுக்குழுக்களிலும்  ‘உடன்பிறவா சகோதரி’ சசிகலாவுக்கு மிக முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்கிறார்கள். ஆனால், இந்த முறை அப்படி அது ஹேஷ்யமாக இருக்க வாய்ப்பில்லை. தலைமைக்கு அடுத்த இடத்தில் சசிகலாவை 'அமர' வைக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் நம்பிக்கையும் உறுதியுமாக!

அப்ப, கட்சிக்குள்ள இரண்டு 'அம்மா'வா..?


No comments:

Post a Comment