சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Mar 2015

தட்டுத்தடுமாறி முதல் சதம் அடித்த அகமத்: காலிறுதியில் பாகிஸ்தான்!

உலகக் கோப்பை கிரிக்கெட் பேட்டியில் அயர்லாந்து அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் காலிறுதிக்கு முன்னேறியது. அகமத் தட்டுத்தடுமாறி தனது முதல் சதத்தை உலகக்கோப்பையில் பதிவு செய்தார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த மற்றொரு கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. 6 புள்ளிகளுடன் உள்ள பாகிஸ்தான் அணி காலிறுதியை எட்ட அயர்லாந்தை நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. 6 புள்ளிகளுடன் உள்ள அயர்லாந்து அணியின் நிலைமையும் இது தான். அந்த அணி பாகிஸ்தானை தோற்கடித்தாக வேண்டும்.
 

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. அயர்லாந்து கேப்டன் வில்லியம் போர்ட்டர்பீல்டு அபாரமாக விளையாடி, அணிக்கு ரன் சேர்த்தார். இருப்பினும் அயர்லாந்து 3 விக்கெட்களை இழந்துவிட்டது. ஸ்டிர்லிங் 3 ரன்களிலும், ஜாய்ஸ் 11 ரன்களிலும், ஒ பிரையன் 12 ரன்களிலும் அவுட் ஆனார்.

இதனையடுத்து களமிறங்கிய பால்பிர்னி, வில்லியம்சுடன் கைகோர்த்தார். வில்லியம்ஸ் அபாரமாக விளையாடி தனது 7வது சதத்தை நிறைவு செய்தார். உலகக் கோப்பையில் தனது முதல் சத்தை பதிவு செய்தார். 107 ரன்கள் எடுத்த வில்லியம்ஸ், சோகைல் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் வருவதும், போவதுமாக இருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் வஹாப் 3 விக்கெட்டும், சோகைல்கான், ரஹாத் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், அடில், ஹரிஸ் சோகைல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
 

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் அகமத் சேஷாத்- அகமத் ஆகியோர் நல்ல தொடக்க தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்தது. அகமத் சேஷாத் 63 ரன்னில் வெளியேற, பின்னர் வந்த ஹரிஸ் சோகைல் (3) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். இதையடுத்து, கேப்டன் மிஸ்பா உல் ஹக் களம் புகுந்தார். 2 சிக்சர், 3 பவுண்டரியுடன் 39 ரன்னில் இருந்த மிஸ்பா, அவரது விக்கெட்டை அவரே வீழ்த்தினார். ஸ்டெம்பில் பேட் பட்டதால் ஹிட் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் வந்த உமர் அக்மல், அகமத்துடன் ஜோடி சேர்ந்தார். அகமத் 94 ரன்கள் எடுத்திருந்தபோது, உமர் அக்மல் அவருக்கு பல வாய்ப்புகளை கொடுத்தார். ஆனால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் அயர்லாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஒரு வழியாக 120 பந்தில் தனது முதல் சதத்தை தட்டுத்தடுமாறி பதிவு செய்தார். அதுவும் உலகக் கோப்பையில் சதம் அடித்ததால் துள்ளி குதித்தார் அகமத். வெற்றி பெற ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் மற்ற பந்துகளை அடிக்காமல் தனக்காக சதம் அடிக்க பல வகையிலும் விட்டுக் கொடுத்த உமர் அக்மலுக்கு நன்றிக் கடனுக்காக வெற்றி ரன்னை அடிக்க கொடுத்தார். கடைசியில் 46.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. அகமத் 101 ரன்னிலும், உமர் அக்மல் 20 ரன்னிலும் களத்தில் இருந்தனர். காலிறுத்தியில் ஆஸ்திரேலியா அணியுடன் பாகிஸ்தான் மோத உள்ளது.



No comments:

Post a Comment