சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Mar 2015

கோச்சடையானுக்கு கடன் தந்த ஆட் பியூரா நிறுவனத்துக்கு லதா ரஜினி நோட்டீஸ்!

தன் மீது வீண் பழி சுமத்தியதாக கோச்சடையான் படத்துக்கு கடன் வழங்கிய 'ஆட் பியூரா' நிறுவனத்துக்கு லதா ரஜினிகாந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கோச்சடையான் படத்துக்காக பெற்ற பணத்தை திரும்ப செலுத்தவில்லை என லதா ரஜினிகாந்த் மீது ஆட் பியூரா நிறுவனத்தினர் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தனர்.
 

இது குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ள லதா ரஜினிகாந்த், "ஆட் பியூராவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். வீண் பழி சுமத்தி தஎனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். எனது பெயரை ஆட் பியூரா கெடுக்கிறது.

கோச்சடையான் படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா ரூ.10 கோடி கடன் அளித்தது. ஆனால் அப்போதே ரூ.1.2 கோடி கழித்துக் கொண்டுதான் தந்தது. தொடர்ந்து, ரூ.20 கோடி கடன் கொடுப்பார்கள் என்ற உத்தரவாதத்தில் ரூ.2.4 கோடி ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் அந்தக் கடனை கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் ரூ.5.6 கோடி திரும்ப செலுத்துப்பட்டுவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, லதா ரஜினிகாந்த்துக்கு பதில் அளித்து ஆட் பியூராவைச் சேர்ந்த அபிர்சந்த் நஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "லதா ரஜினிகாந்த் வாங்கிய ரூ.10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மேற்கொண்டு ரூ.20 கோடி தருவது பற்றி எங்கும் நாங்கள் குறிப்பிடவில்லை.

அதே போல படத்தின் தமிழ்நாடு உரிமை ஈராஸ் நிறுவனத்துக்கு எங்களுக்குத் தெரியாமல் விற்கப்பட்டது. வாங்கிய ரூ.10 கோடியில், நவம்பர் 2014 வரை ரூ.4.7 கோடி மட்டுமே தரப்பட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து  ரூ.6.84 கோடி இன்னும் நிலுவையில் உள்ளது. பணத்தை திரும்பத் தராமல் லதா ரஜினிகாந்த் பொய்களைப் பரப்புகிறார்.

முன்னதாக இது குறித்து லதா ரஜினிகாந்த் பெங்களூரு மற்றும் சென்னை என இரண்டு நீதிமன்றங்களிலும் தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன. கூடிய விரைவில் லதா ரஜினிகாந்த பொய் சொல்லிவருவது அனைவருக்கும் தெரியும்" என்று கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment