சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Mar 2015

ஓயாத’ வேலை உயிருக்கு ஆபத்தா?

ன அழுத்தம் ஒரு மனிதனை என்ன செய்யும்? கோமாவில் கொண்டுபோய் சேர்க்கும்! கிஷோரை அப்படித்தான் கோமாவில் தள்ளியிருக்கிறது மன அழுத்தம்!
'பரதேசி’, 'ஆடுகளம்’, 'எங்கேயும் எப்போதும்’, 'பயணம்’ என தனித்துவமான படங்கள் மூலம் தன்னுடைய கலைப்பயணத்தைத் தொடர்பவர் எடிட்டர் கிஷோர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளவனூர் என்ற கிராமத்தில் இருந்து வந்த இளைஞர் கிஷோர். 'ஆடுகளம்’ படத்துக்காக தேசிய விருது உட்பட பல விருதுகள் பெற்றார். தற்போது பாலாவின் 'தாரை தப்பட்டை’, வெற்றிமாறனின் 'விசாரணை’ போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி வந்தவர், கடந்த சனிக்கிழமை திடீரென மயங்கி சரிந்திருக்கிறார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. 'ஓவர் ஸ்ட்ரெஸ்ஸில் தன்னை வருத்திக்கொண்டு ஓயாமல் வேலை செய்தது மட்டும்தான் கிஷோரின் இந்த நிலைக்குக் காரணம்!’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
கிஷோர் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயா மருத்துவமனைக்குச் சென்றோம். தீவிர சிகிச்சைப் பிரிவில் எந்த அசைவும் இல்லாமல் படுத்திருக்கிறார் கிஷோர். உறவுகள், நண்பர்கள் என மருத்துவமனையில் சூழ்ந்திருந்தார்கள்.
'கடந்த வாரம் சனிக்கிழமை காலையில் வெற்றிமாறனின் 'விசாரணை’ படத்தை எடிட் பண்ணிட்டு இருந்தார். திடீர்னு உட்கார்ந்து இருந்ததுபோலவே அப்படியே சிலை மாதிரி ஆகிட்டார். வெற்றிமாறன் கூப்பிட்டுப் பார்த்தும் சுயநினைவுக்குத் திரும்பாதவர். அவர் அருகில் சென்று தொட்டு அழைத்ததும் மயங்கி கீழே சாய்ந்துவிட்டார். சிறிது நேரத்துக்குள் சுயநினைவு திரும்பியவரை மருத்துவமனையில் சேர்த்தார் வெற்றிமாறன். அங்கு ஸ்கேன் செய்தபோது தலைக்குள் சின்ன கட்டி இருப்பது  தெரியவந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் அதை அகற்றலாம் என்று இருந்தபோது சனிக்கிழமை இரவு, மூளைக்குள் அந்தக் கட்டி வெடித்து ரத்தம் கசிந்து நினைவு இழந்து கோமாவுக்குச் சென்றுவிட்டார். 'நினைவு திரும்ப 95 சதவிகிதம் வாய்ப்பு இல்லை’ என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். 'அடுத்த 24 மணி நேரத்துக்குள் அவராகவே சுவாசிக்க வேண்டும். அப்படிச் சுவாசித்தால் அவரைக் காப்பாற்றலாம்’ என்றார்கள். ஆனால், இதுவரை அவராகவே சுவாசிக்கவில்லை. வென்ட்டிலேட்டர் மூலம் ஆக்சிஜனை செலுத்தி வருகிறார்கள். கிஷோருக்கு 36 வயசு ஆகுது. இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் நடந்துட்டு இருந்துச்சு. ஆனால், அதற்குள் இப்படி ஆகிடுச்சு. இயக்குநர்கள் பொறுமையாகப் பல மாதங்கள் ஷூட்டிங் நடத்திவிட்டு... அது அத்தனையும் எடிட்டர் டேபிளுக்கு வரும்போது மட்டும் நாலு நாட்களில் அத்தனையையும் பார்த்து உடனே எடிட் பண்ணித்தாங்க. டீஸர் கட் பண்ணித்தாங்க, டிரெய்லர் ஒட்டித்தாங்கன்னு சொன்னால் எப்படி? நாலு மணி நேரம்கூட தொடர்ந்து கிஷோர் தூங்க மாட்டார். எப்பவும் வேலை வேலைன்னு பரபரன்னு இருப்பார். அதுவே அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துடுச்சுங்க. 'இனி கிஷோர் மீண்டு வந்தாலும் ஒரு குழந்தைபோலத்தான் இருப்பார். அவரை பொறுமையாகப் பராமரிக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் சொல்லிட்டாங்க.!'' என்று கலங்குகிறார்கள் அவரது நண்பர்கள்.
கிஷோரின் அக்கா பரணி பிரியாவுக்கு ஆறுதல் சொல்லி பேசினோம். 'அவனுக்கு இப்படி ஆனதை எங்களால நினைச்சுக்கூட பார்க்க முடியலைங்க. காசு, பணம் இந்தப் பேரு, புகழ் எதுவும் எங்களுக்கு வேணாம். எங்க கிஷோர் மட்டும் திரும்பி வந்துட்டா போதும். அவனை நாங்க ஊருக்குக் கூட்டிட்டுப்போய் காலம் முழுக்க பக்கத்துல இருந்து பார்த்துக்குவோம்!'' என்று தேம்பித் தேம்பி அழுகிறார்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி  நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியர் டாக்டர் டி.பாலசுப்ரமணியனிடம் கேட்டபோது, ''உடலுக்கும், மனசுக்கும் ஓய்வு என்பது கட்டாயம் தேவை. எந்த வேலையாக இருந்தாலும் ஒருநாளைக்கு எட்டு மணி நேரத்துக்குள்தான் செய்ய வேண்டும். எட்டு மணிநேரம் வேலை செய்தாலும், இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை கட்டாயம் 10 நிமிட பிரேக் தேவை. மூளைக்குள் இருக்கும் ரசாயனத்தின் அளவு குறைந்தாலோ, கூடினாலோ பிரச்னைகள் வரும். அப்படி குறையவோ, கூடவோ காரணம், மூளையை கசக்கி ஓய்வு இல்லாமல் வேலை செய்வதுதான். உடலை நாம் ஓய்வு இல்லாமல் அளவுக்கு அதிகமாக வருத்தும்போது மூளை தானாகவே ஓய்வெடுத்துக்கொள்ளும். அந்த ஓய்வு என்பது நீங்கள் நினைப்பதுபோல சாதாரணமானது அல்ல... அதுதான் கோமா!'' என்று சொல்லி அதிரவைத்தார்.
சீக்கிரம் நலமுடன் திரும்பி வாங்க கிஷோர்!



No comments:

Post a Comment