சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Nov 2014

பாருக்கா போறீங்க?


அண்மையில் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தி பலரையும் அருவெறுப்புடன் முகம் சுளிக்கவைத்தது. சென்னை, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கோபி என்பவர் சட்டவிரோதமாக 19 பூனைகளை அடைத்து வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டார். 'நடக்கப்போகும் தன் திருமணத்துக்காக, விருந்துக்காகத்தான் பூனைகளை அடைத்துவைத்தேன்என்று அவர் சொன்னது முதல் அதிர்ச்சி என்றால் அருகில் இருக்கும் டாஸ்மாக் பார்களில் பூனைக்கறியை அவர் விற்றுவந்தது இன்னொரு அதிர்ச்சி.

 'இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று பார் வட்டாரங்களில் விசாரித்தால், 'இதுக்கு மேலேயும் நடக்கும்' என்கிறார்கள்இப்போதெல்லாம் நடுத்தர மற்றும் பிரீமியம் வகை சரக்கு பாட்டில்களில் மூடியின் டிசைனை மாற்றிவிட்டதால் பெரும்பாலும் அதில் கலப்படம் செய்ய வாய்ப்பில்லை. சாதாரண வகை பாட்டில்களில் மூடியின் சீலினை உடைக்காமல் கழற்றி 60 மில்லி எடுத்துவிட்டு அதே அளவு தண்ணீர் கலந்துவிடுவார்கள்.


 அடுத்து சைட் டிஷ். பெரும்பாலும் காய்கறி மற்றும் பழவகைகளில் தவறு நடப்பதில்லை. அனைத்து தில்லுமுல்லுகளும் இறைச்சி மற்றும் முட்டை வகைகளில்தான். அவித்த முட்டை ஓட்டினை உடைக்காமல் வைத்திருந்தால் இரண்டு முன்று நாட்களுக்குக்கூட வரும் என்பது பார் கணக்கு

சத்துணவு முட்டை அல்லது அளவு மிகக்குறைந்த முட்டைகள் பெரும்பாலான பார்களில் பயன்படுத்தப்படுகிறது.  நீங்கள் ஆம்லேட் ஆர்டர் செய்தால், வெங்காயம் அதிகமாகப் போட்டு முட்டை குறைபாட்டை சரிசெய்துவிடுவார்கள்.

 அடுத்து மீன் வகை. முதல் நாள் பொரித்த மீன் துண்டு புஷ்டியாக இருக்கும். அதன் விலை 30 ரூபாய் என்று வைத்துக் கொள்ளுங்கள், அன்று விற்றுவிட்டால் ஓகே. இல்லாவிட்டால் அடுத்தநாள் மீன் கொஞ்சம் வாடிவிடும். அதை மறுபடி பொரித்து 20 ரூபாய்க்கு விற்றுவிடுவார்கள். அப்படியும் விற்கவில்லையா? முன்றாம் நாள் மீன்65 அல்லது சில்லி ஃபிஷ் ரெடி!

 99 சதவிகித பார்களில் மட்டன் என்ற பெயரில் பீஃப்தான் பறிமாறப்படுகிறது. ஆனால் கடைக்காரரைக் கேட்டால், சூடம் ஏற்றி சத்தியம் செய்வார் மட்டன்தான் என்று.  கோழி இறைச்சியிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கும். பன்றியின் கறியைக் குக்கரில் ரெண்டு விசில் சேர்த்து வைத்தால், சிக்கன் போலவே இருக்கும். அதை சிக்கனுடன் இணைத்து விடுவார்கள்


பிராய்லர் சிக்கனில் கழிவாக வெட்டிவீசப்படும் பகுதிகளே பெரும்பாலான பார்களில் சிக்கன் 65யாக சிவக்க சிவக்கப் பரிமாறப்படும். அதுபோல் நிறைய பார்களில் கோழிக்கறியை வினிகரில் ஊறவைத்து பின்னர் வெறும் உப்பு மட்டும் போட்டு அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்வார்கள். நீங்கள் என்ன ஆர்டர் செய்தாலும் அந்த வகை கோழிக்கறியாக அது மாறும்

ஏற்கெனவே மசாலாவுடன் தயார் செய்து வைத்திருந்த சிக்கனாக இருந்தால் சிம்பிள். எடுத்து நன்றாகத் தண்ணீரில் அலசி மீண்டும் ப்ரிட்ஜில் வைத்துவிடுவார்கள்.

 இதாவது பரவாயில்லை, முதல்நாள் இரவு குடித்துப் போடப்பட்ட யூஸ் அண்ட் த்ரோ டம்ளர்களைக் கழுவி, மறுநாள் விற்கும் கொடுமைகளும் நடக்கிறதாம்.


என்ன ஒன்று, இதையெல்லாம் கண்டு பிடிக்கும் நிலையில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். மப்பு மாமோய் மப்பு!


No comments:

Post a Comment