சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Nov 2015

புகார் கூறிய பொதுமக்களை பேசவிடாமல் தள்ளிவிட்ட அமைச்சர் மோகன்! (வீடியோ)

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் குறைகளை கூறியபோது, அவர்களில் ஒருவரை பேசவிடாமல் அமைச்சர் ப.மோகன் தள்ளி விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அருகே வடகரசலூர் கிராம பகுதியில் உள்ள அம்மன் நகரில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே சுமார் 20 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மவுலீஸ்வரன் என்ற 4 வயது சிறுவன், டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளான். ஆனால் அதுவரை அமைச்சரோ, எம்.எல்.ஏ.க்களோ, அரசு அதிகாரிகளோ அங்கு சென்று பார்வையிடவில்லை. டெங்கு காய்ச்சலை தடுக்கவும் எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை,  அமைச்சர் ப.மோகன் பல்வேறு இடங்களில் பார்வையிட்டும், மழை நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார்.

அதன்படி கடந்த 14-ம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அம்மன் நகருக்கு வந்திருக்கிறார். அவருடன் மாவட்ட கலெக்டர் லட்சுமி மற்றும் அரசு அதிகாரிகளும் வந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு கூடிய கிராம பொதுமக்கள், அமைச்சரிடம் பல்வேறு புகார்களை கூறியிருக்கின்றனர். அப்போது பொதுமக்கள் சார்பாக பேசிய ஒருவரை பேசவிடாமல் தடுத்து, அவரை தள்ளி விட்டுள்ளார் அமைச்சர் ப.மோகன். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ''எங்கள் பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளில் கழிப்பிடம் இல்லை. நாங்கள் கழிப்பிடம் கட்டுவதற்காக அரசு ரூ.12 ஆயிரம் தருகிறது. ஆனால், கணக்கு எடுக்க வரும் அதிகாரிகள், 2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு. மீதமுள்ள 10 ஆயிரத்தைத்தான் தருவோம் என கூறுகின்றனர்'' என்று அப்பகுதி மக்கள் அமைச்சர் ப.மோகனிடம் கூறுகின்றனர்.

அதற்கு அமைச்சர் ப.மோகன், ''யாருன்னு சொல்லு. இப்பவே கேட்கிறேன்'' என்கிறார். அதற்கு அந்த மக்கள், ''கணக்கு எடுக்க வருகிறவர்கள்தான்'' என்று கூறுகின்றனர். ''அந்த இடத்தை எல்லாம் நான் வரும்போதே பார்த்துகிட்டுதான் வருகிறேன்... நிறுத்து'' என்று மோகன் கூறுகிறார்.

அப்போது பொதுமக்களில் இருந்த ஒருவர், ''பொதுமக்கள் எல்லாம் ஒண்ணா சொல்லுது. நிறுத்துன்னு சொல்றீங்க'' என்றவாறு ஒரு ஏரியில் உள்ள குளத்தைப் பற்றி பேச முயல்கிறார். அதற்குள் மோகன், ''இருய்யா... இருய்யா... போ'' என்று அவரை பேச விடாமல் தள்ளிவிடுகிறார்.

அப்போது அந்த நபர், ''ஏண்ணே அடிக்கிறீங்களா...ஏண்ணே அடிக்கிறீங்களா? பொதுமக்கள் சார்பாக பேசுறேன். அடிக்கிறீங்களா?'' என்று மீண்டும் கேட்கிறார். இதையடுத்து, அங்கிருந்த போலீசார் அந்த நபரை அந்த இடத்தில் இருந்து வெளியே தள்ளிக்கொண்டு சென்று விடுகின்றனர்.


No comments:

Post a Comment