சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

12 Jan 2013

பந்திக்கு முந்து - பழமொழிகள்


பழமொழிகள்:-

* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
*
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
*
நிறைகுடம் தளம்பாது.
*
தாட்சண்யவான் தரித்திரவான்
*
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
*
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
*
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
*
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
*
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
*
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
*
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
*
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
*
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
*
புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
*
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
*
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
*
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
*
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
*
மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் பத்துக்கட்டு விலக்குமாரு
*
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
*
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
*
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
*
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
*
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
*
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
*
மைத்துணன் உதவி மலைபோல
*
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
*
யானை படுத்தாலும் குதிரை மட்டம்
*
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
*
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
*
வழியோடு போய் வழியோடு வந்தால் அதிகாரி சுண்டைக்காய்க்குச் சமம்
*
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
*
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
*
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
*
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
*
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
*
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
*
வேலிக்கு ஓணான் சாட்சி.
*
வைக்கோற் போர் நாய் போல.

No comments:

Post a Comment