சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Jan 2013

"தொல்லைக்காட்சி"யில் சூதாட்டம்.


கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி,  மற்றும் S.S மியூசிக் ஆகிய
சேனல்களில்…..  இரவு 10:30
மணிக்கு தொடங்குகிறது அந்த  நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும்  ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள்­ ­.

அந்நிகழ்ச்சியின­ ­ தொகுப்பாளர்   கேள்வி கேட்கிறார். ‘திரையில்

காட்டப்பட்டி­ ­ருக் இரு முன்னணி நட்ச்சத்திரங்கள­ ­ யார்?’

என்பதுதான் அது.


இது போதாது என்று இந்த   இரு நடிகர்களும்  பதினாறு வயதினிலே படத்தில்

இணைந்து நடித்த நடிகர்கள் என்ற    க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (?) கிடைத்துவிட, அவர்கவுண்டமணியும்

செந்திலும்என பதில் சொல்கிறார்.   ரஜினியையும், கமலையும்

பார்ப்பதற்கு கவுண்டமணியும்   செந்திலும் போலவா இருக்கிறார்கள்

என்ன கூத்து இது?


தினமும் இரவு 10:30   மணிக்கு தொடங்கும் இந்த     நிகழ்ச்சி நள்ளிரவு 12  மணிக்கு 

முடிவடைகிறது. பரிசுத்   தொகையோ ரூ.55,000. என்ன  நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள்

இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்?

உண்மையிலேயே கொடுக்கிறார்களா­ ­?

அவர்களின் நோக்கம் என்ன? இதன்  பின்புலம் என்ன?

என்பதை விசாரித்தால் சில  திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில்.­ ­ திரையில்  காட்டப்படும் உருவங்கள் இலகுவில்

கண்டுபிடிக்கக் கூடியதாகவும்,  உருவங்கள் குறித்து கேட்கப்படும்

கேள்விகளும் மிக   எளிதானதாகவுமே அமைகின்றன.

அதற்குக் காரணம், பார்ப்பவர்கள்   உடனே அதற்கான

பதிலை தெரிவித்து பரிசைப்    பெற்றுவிட வேண்டும் என்ற

உந்துதலை ஏற்படுத்துவதுதா­ன்.  திரையின் மூலையில் மின்னும்

தொலைபேசி என், உண்மையில்   தொலைபேசி எண் அல்ல.

அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும்  எத்தனை ஆயிரம் பேர் ஃபோன்

செய்தாலும் அவர்களை வெயிட்டிங்   லிஸ்டில் காக்க வைத்து கால்

பேலன்சை அபகரித்துவிடும்­ ­.  ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்)

ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த  ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம்

உள்ள மக்கள், குறிப்பாக    தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார­கள்.


இந்த நிகழ்ச்சியிலிரு­ ­ந்து நாம் அறிய  வேண்டிய உண்மைகள் சில:-

1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங்   லிஸ்டில் இருப்பவர்கள்தான­ ­

பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில்  ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள்.

பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர்  பெயர் திரையில்  காட்டப்படுவது இல்லை.

வேண்டுமென்றே தவறான  பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதா­ ன்

இவர்கள் பணி.

2.
ஒவ்வொரு நாளும் கடைசியில்    ஒரே ஒருவர் மூலமாக (அதுவும்

ஸ்டுடியோ ஆள்தான் )  நிகழ்ச்சி முடியும்    கடைசி நேரத்தில்தான்

சரியான பதில்  சொல்லப்படுகிறது. ­­ இதிலிருந்தே சேனல்கள்

திட்டமிட்டு ஏமாற்றுகின்றன   என்பதை அறியலாம்.

3.
கால் வெயிட்டிங்கிற்க­ ­ுப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட

நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின்

பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின்  நோக்கம்.

4.
நாம் நினைப்பது போல்  இது நேரலை நிகழ்ச்சி அல்ல.

இது முன்பே பதிவு செய்யப்பட்ட  நிகழ்ச்சி.

அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.

5.
இதை தன்னுடைய சொந்த  நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம் இந்த   

நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்ட­ ­­  தப்பித்துக் கொள்கின்றன டி.வி.  சேனல்கள்.  இவர்கள் 

அடிக்கும் கூட்டுக்  கொள்ளைக்கு நாட்டின்

அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும்  உடந்தை.  இதைப் படித்தபிறகாவது,

இம்மாதிரியான   நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள்.

உங்களுக்குத் தெரிந்தவர்களிடம­   சொல்லுங்கள்….

1 comment:

  1. Th.................ya Pasanga ithukku vera tholil pannalaam

    ReplyDelete