சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

22 Jan 2013

இளைய தலைமுறையின் தவறான உணவு முறை.

                   வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் 
சாப்பிடுகிறோம்எப்படிசாப்பிடுகிறோம் என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர்.இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் 
வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக்கொள்வார்கள். அதுவும் 
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா,பர்கர், 
எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த 
கெமிக்கல்குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

      இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதேஅதிர்ச்சிகரமான உண்மை. பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில்பிரைட் 
சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான்.

       இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் 
இப்படித் தான்சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து 
சாப்பிடுவது தான் நல்லது. மைதாநல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் 
தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியைஎடுத்துக் கொள்ளும்

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:
      ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில்அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்றுநோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியானஉணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் 
மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரைவைக்கணும்.

        அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை
 ஏற்று செரிமானம்செய்கிற சக்தி நம் ரத்தத்திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை 
சுத்திகரிக்காது. ஒரு பாக்கெட்டில்எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ 
அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான்கலப்பார்கள். ஆனால், இதைச் 
சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோசாப்பிட்டால் 
என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை
பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் 
சம்பந்தப்பட்டபொருட்களைச் சாப்பிடக் கூடாது.

    ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை. வட இந்திய உணவு விற்கிறசாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் 
எல்லாம் எப்போது தயாரித்தது. அவைசுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது. அங்கு வேக வைத்தஉருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங்காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள்.இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துலஒருத்தர்
 தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

வெப்பநிலையில் மாறுதல்:

      சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து 
வந்தவை தான்.ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும்நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் 
தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது.ஒன்றரை நிமிடத்தில் 150 
டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு
ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன் என்று சொல்லிஉலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

  காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள்நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு 
அதிகமாக சாப்பிடவேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் 
ஆகியவற்றை சேர்ப்பது நல்லது.

    பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை 
காற்கறிகள், பழங்கள்,பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள 
வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்கவேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும்உங்கள் பசி உணர்வை 
குறைக்கும்.

     ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர்அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு 
கோதுமை உணவு வகைகளைஎடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு 
எளிமையானது

        சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு 
வேலைகளை முடித்துவிட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கிவிடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி 
தவிர்ப்பது நல்லது.

      இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம்.நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக 
மாற்றி விட்டால் வீணாக நம்உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் 
சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்குதந்தால் உடல் பருமன் என்பது
 பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவுகலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

அசைவம்: 
       அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் 
போட்டு வறுக்க கூடாதுலேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.

நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு 
ஏற்படுவது சர்வநிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், 
நெஞ்சு எரிச்சல் இருக்கும்இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான 
சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சைபெறுவது நல்லது.
இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதய நோய் ஆபத்து:

          ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்துபாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், 
கணையநீர் தேவை. இது குறைந்தால்ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் 
சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.இல்லையென்றால் 
அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல்,
பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய்,மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது.அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். 
நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக்காரணம் என்கிறார்கள்

விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment