சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Jan 2013

அரசு பள்ளிகளின் தரம் கேள்விக் குறி


             தமிழ் நாட்டில் அரசு பள்ளிகளின் தரம் கேள்விக் குறியாகி உள்ளது.ஏழை, மற்றும் நடுத்தர மாணவர்கள்,தனியார் பள்ளிகளில் படிக்க வசதியின்றி தான் அரசு பள்ளிகளில் சேருகின்றனர்.ஆனால் இங்கு வகுப்பறை முதல் குடிநீர்,கழிப்பறை வசதி என எதுவும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் தற்போது பள்ளிகளில் முக்கியமாக காணப்பட வேண்டிய ஒழுக்கமும் இல்லாமல் போய்  விட்டது.இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் ஒழுக்கமிழந்தது மாணவர்கள் அல்ல. ஆசிரியர்கள்.

            இந்த வேதனைக்குரிய சம்பவம் நடந்தது தமிழ்நாட்டில் தான்.வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது; 150 மாணவ, மாணவியர்படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள், சமீபத்தில்இணையதளம் ஒன்றில் வெளியானது. இது, இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள்வால்பாறை  பொள்ளாச்சி மெயின் ரோட்டில், நேற்று காலை,சாலை  மறியலில் ஈடுபட்டனர்.


       ஒழுக்கக்கேடுக்கு  இப்படி ஒரு பள்ளி என்றால் தமிழ் நாட்டின் மிகச்ச்றந்த அரசு பள்ளியாக அடையாளம் காட்டபடுவது சிவகங்கை அருகே மரக்காத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி தான்.இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள்   ஆங்கிலத்தில் சரளமாக பேசி அசத்துவதுஅப்பகுதியினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம்மரக்காத்தூரில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளதுஇங்கு மரக்காத்தூர்நற்கனி,புலியூரணிமணியன்குடிசிவந்தரேந்தல்அந்தரேந்தல்குருமனேந்தல் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர்இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பெஞ்சமின், 38, முயற்சியால்மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசிஅசத்துகின்றனர்
இவர்தமது சொந்த முயற்சியால், 5 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு , காலை 8.30 முதல் 9.15 மணி வரைஆங்கிலத்தில் படித்தல்பேசுதல்இலக்கண பயிற்சி அளிக்கிறார்இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் சுயநடையில்ஐந்து வரிக்கு மிகாமல்,
பிழையின்றி ஆங்கிலம் எழுதுவர்இது தவிர வாசிப்புஇலக்கண பயிற்சியும்அளிக்கிறார்பள்ளி விழாக்களின் போதும்மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் மூலம் பட்டிமன்றம்நாடகம்பேச்சுகட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன

          அதில் பங்கேற்றுசரளமாக ஆங்கிலம் பேசுவதுஅப்பகுதியினரை  வியப்பில் ஆழ்த்துகிறதுமாணவர்கள் அனைவரும்பாட நேரங்கள் தவிர்த்துபள்ளி வளாகத்தில் ஆங்கிலத்தில் உரையாடுவது தான் சிறப்புமேலும், "நண்பர்கள் குழுமூலம் விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு சென்றுசுகாதாரம்பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கி வருகின்றனர்

      எட்டாம் வகுப்பு மாணவன் மணிகண்டன் கூறுகையில், ""ஆரம்பத்தில் ஆங்கிலம் சற்று கடினமாக தான் இருந்ததுஆசிரியர் தந்த ஊக்கத்தால்ஆங்கிலம் கற்பதுபேசுவது எளிமையானது, '' என்றார்.

        ஆசிரியர் பெஞ்சமின் கூறுகையில்,""அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வார்த்தைகள்சின்ன வாக்கியங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வந்தேன்தினமும் மாணவர்களுக்கு வாசிப்பு திறன்எழுத்துஇலக்கண பயிற்சி தருகிறேன்ஆங்கிலம் அந்நியமொழி என்ற எண்ணம் வரக்கூடாதுதயக்கமில்லாமல் பேசவேண்டும்தவறாக 
பேசுகிறோம் என கூச்சப்படவேண்டாம் என வலியுறுத்துவேன்,'' என்றார்.
 

No comments:

Post a Comment